வெள்ளி, 3 டிசம்பர், 2010

வேளாண்மை துறைவாரியான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட

வேளாண்மை துறைவாரியான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட 2010 - 11 ஆம் ஆண்டிக்கு காலவரையறைக்கு உட்பட்ட செயல் திட்டம் தயாரித்து பயனாளிகளுக்கு நேரடியாக திட்டப்பயன் சென்றடைதல் குறித்து அரசாணை (டி) எண். 234 1.12.1020 அன்று வேளாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


வேளாண் துறையில் 2010-11 ஆம் ஆண்டில், மாநிலத் திட்டங்கள், மத்திய மாநில சார்புத் திட்டங்கள் மற்று மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படும் திட்டங்கள், ரூ.1975.93 கோடி நிதி ஒதுக்கீட்டில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக, வேளாண் பொறியியல், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு ஆகிய துறைகள் மற்றும் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழக மூலமாக செயல்படுத்தப்பட்டு வருன்றன.

2) வேளாண் துறையில் பணியாற்றி வரும் விரிவாக்கப் பணியாளர்களை ஊக்கப்படுத்து வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்று சிறப்பத்த வேளாண் கருத்தரங்க மற்றும் அலுவலர்கள் மாநாடு, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 24.11.2010 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. வேளாண் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், உற்பத்தியினை மேலு அதிகரிக்கு வகையிலும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாநாட்டின்போது நடைபெற்ற கருத்தரங்கில், பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த வல்லுநர்கள், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான புதிய நவீன தொழில்நுட்பங்களை வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

3) தற்போது, பயிர் சாகுபடிக்கு சாதகமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்துள்ளதன் காரணமாக, வேளாண் பயிர்களின் சாகுபடி சென்ற ஆண்டினைக் காட்டிலு அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலு, தற்சமய நீர்நிலைகளில் உள்ள இருப்பு நிலவரத்தின்படியு, சாதகமான பருவ நிலை காரணமாகவும் மேலு கூடுதலான பரப்பில் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

4) எனவே, சாதகமான இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் அறிவுரைகளை, அதே வேகத்தில், சிறிதும் பிறழாமல், களப்பணியாளர்கள் மூலம் விவசாயிகளைச் சென்றடைய செயல் திட்ட" ஒன்று வகுத்து அதன் மூல திட்டப்பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாக காலத்தே சென்றடைய வேண்டும் என்று அரசு கருதுறது.

5) அவ்வாறே, வேளாண் துறையின் அனைத்து துறைத் தலைவர்களும் அனைத்து திட்டப் பணிகளையும் உரிய காலவரையறையுடன், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதற்கான செயல் திட்ட குறித்து ஆணை வெளியிடப்படுறது:-

* அனைத்துத் திட்டங்கள் வாரியான, இன வாரியான, மானியங்களுக்கு ஏற்ப, பயனாளிகளை தெரிவு செய்து, தேவைப்பட்டியல் ஒன்று கிராம வாரியாக தயாரிக்கப்பட வேண்டும். இந்த பயனாளிகளுக்கு உரிய அடையாள அட்டைகள் 15.12.2010 க்குள் வழங்கப்பட வேண்டும். இந்த அடையாள அட்டையினை பூர்த்தி செய்யும்போது, வருவாய்த்துறை அலுவலர்களின் துணையுடன், நில அளவை எண், நில உரிமையாளர் மற்றும் இருப்பட முகவரி போன்றவை தவறுதலின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

* பல்வேறு திட்டங்களின்கீழ் இனவாரியாக தேவைப்படும் இடுபொருட்களான தரமான விதைகள், உயிர் உரங்கள், இரசாயன உரங்கள், நுண்ணூட்டக் கலவை உரங்கள், பயிர் பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் பண்ணைக் கருவிகள், சொட்டுநீர் மற்று தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் போன்றவற்றை காலத்தே கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வெகு அருகாமையில் கிடைக்கும் வகையில் உரிய மையத்தில் இருப்பு வைத்திட வேண்டும்.

* இடுபொருட்களை வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேளாண் ஆலோசனை மையங்கள் (அக்ரி க்ளினிக்), அரசு விதைப் பண்ணைகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் இதர அரசு மற்றும் கூட்டுறவு அலுவலகங்கள் போன்ற மையங்களின் மூலமாக வழங்ட வேண்டும். மேலும், நடமாடும் இடுபொருள் வழங்கு மையங்களில் இருப்பு வைத்து இவ்விடுபொருட்களை வழங்கலாம். இவ்விடுபொருட்கள் உரிய அலுவலர்களின் முன் அனுமதி பெற்று இருப்பு வைத்து விநியோக்கப்பட வேண்டும். இப்பணிகள், 2011, ஜனவரி 15- தேதிக்குள் முடிக்குமாறு திட்டமிட்டு செயலாற்றிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

* இவ்விடுபொருட்கள் விநியோகத்திற்கான நாளை முன்கூட்டியே ஊடகங்கள், பத்திரிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், தண்டோரா போன்றவைகள் மூலம் விவசாயிகளுக்குத் தெரிவித்திட வேண்டும்.

* கிராமவாரியான இடுபொருள் வழங்கும் பணி பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி, சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல், குறிப்பட்ட நாளில், குறிப்பட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.

* இவ்விடுபொருள் வழங்கும் முகாம்களை துவக்குபோது மாவட்ட ஆட்சியர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்று அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் பயனாளிகளின் தெரிவு பட்டியலின்படி, திட்டவாரியான இடுபொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

* கிராம விழிப்புணர்வு முகாம் கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் அனைத்து திட்டங்களின் இனவாரியான இலக்குகளின்படி, பயனாளிகளுக்கு அரசின் இடுபொருட்கள் மற்று திட்ட பயன்கள் 15.2.2011க்குள் சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் செயலாற்ற வேண்டு.

* திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக எவ்விதக் குறைபாடும் இன்றி தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடைய வேண்டு.

* மேற்கண்டவாறு திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் பணிகளை மேற்பார்வையிட, ஒவ்வொரு துறையிலும் உயர் அலுவலர்களை நியமன செய்து, பயனாளிகளுக்கு காலத்தே அரசின் பயன்கள் சென்றடைவது கண்காணிக்கப்பட வேண்டும். இந்த கண்காணிப்பை, வட்டார அலுவலர் 100 சத அளவிலு, மாவட்ட அலுவலர்கள் 25 சத அளவிலு, மாநில அலுவலர் 10 சத அளவிலு எவ்வித முன்னறிவிப்பன்றி ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டு.

* தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் அவர்களுக்கு திட்ட வாரியாக வழங்கப்பட்ட இடுபொருட்கள் மற்றும் இதர பொருட்கள் குறித்த வேளாண்மை மற்றும் அனைத்து சகோதரத் துறைகளின் அனைத்து விவரங்களை வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநரும், மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநரும் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வார இறுதியிலும் பணி முன்னேற்றம் குறித்த அறிக்கை சபந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் (இதற்கான படிவம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது). இதனை துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பார்வைக்கு வைக்க கடமைபட்டவர்கள் ஆவர்.

6) மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திட்டப் பயன்கள் முழுமையாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சென்றடையுமாறு துறைத் தலைவர்கள் செயலாற்றிட வேண்டு என்று அரசு ஆணையிடுறது. மேலு, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வேளாண் துறையின் சகோதரத் துறைகளின் பணியாளர்கள் ஒருங்ணைந்து செயல்பட வேண்டு என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது  .


மேற்கண்ட இந்த அரசு ஆணை(டி) எண். 234 , கீழ்கண்ட அரசு அலுவலர்களுக்கு அனுப்பட்டு உள்ளது


வேளாண்மை ஆணையர், சென்னை - 5 தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர், சென்னை - 5

வேளாண்மை விற்பனை மற்றும் வேளான் வணிகத்துறை ஆணையர், சென்னை - 32
தலைமை பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, சென்னை - 35 அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ( சென்னை நீங்கலாக )

நகல்
அரசு முதன்மைச் செயலாளர், வருவாய்த் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9

கருத்துகள் இல்லை: