திங்கள், 6 செப்டம்பர், 2010

நமது நாட்டு வேளன்மையின் பரிதாப நிலையும் நாம் செய்ய வேண்டியதும்



இருபது நூற்றாண்டை கடந்து இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் கலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ளோம். உலக வரலாற்றில் விஞ்ஞான வளர்சியின் உச்சகட்டமாக இருபதாம் நூற்றாண்டு எண்ணப்பட்டலும் கூட இதே விஞ்ஞான வளர்சி உயிர்களை அழிக்கும் வளர்சியாகவும் செயல்பட்டுவந்துள்ளது. மிகப்பெரிய சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்கி உள்ளது நிலத்தையும், குடிக்கின்ற நீரையும், சுவாசிக்கின்ற காற்றையும் பாழடித்துள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

கடந்த நூற்றாண்டில் இந்திய வேளண்மைக்கு ஏற்பட்ட சோதனை மிகப் பெரிய சோதனை. வளரும் நாடுகள் யாவும் அடிமை நாடுகளாக இருந்து இராண்டாம் உலகபோருக்கு பின்னர் படிபடியாக விடுதலை பெற்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாய் இருந்த இந்தியாவின் விவாசாயம் சீரழிந்தது. இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு நீர்பாசனதிட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதால் உருவானதுதான் மேட்டூர் அணை , கரிகாலன் கட்டிய கல்லணை பழுது பார்க்கப்பட்டது,கல் அணை கால்வாய் வெட்டப்பட்டது (புது ஆறு), இவ்வாறே பெரியாறு அணைத்திட்டம், பாலாற்று கால்வாய் என்று பலவற்றைக் கூறலாம்.


இதன் முக்கிய நோக்கம் நீர்வரியும் நிலவரியுமாகும். இந்த வரி விதிப்பானது நமது விவசாயத்தை பெருமளவு பாதித்தது என்று கூறலாம் ஏனெனில் பிரிட்டிஷ் அரசுக்கு வரிசெலுத்த முடியாமல் பெரும் நிலங்களில் விவசாயம் செய்த ஜமின் அமைப்புகள் விவசாயம் செய்வதை குறைத்துக் கொண்டன. இதனால் பாதிக்கும் மேற்பட்ட விவசாயநிலங்கள் தரிசாக போடப்பட்டது.இதே போன்று அனேக சிறு விவசாயிகளும் நில வரியும், நீர் வரியும் செலுத்த முடியாமல் தங்கள் தேவைக்கும் மட்டும் விவசாயம் செய்ததால் மேலும் அதிக விவசாய நிலங்கள் தரிசாக மாறிப்போனது. இதனால் ஏரி, குளங்கள் தூர்ந்து போயின இத்தகைய காரணங்களினால் கிரமங்களில் பொதுப்பணிகள் புறக்கணிக்கப்பட்ன.


விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில் நமது அரசாங்கம் தொலைநோக்கு பார்வையில்லாமல் கடைபிடித்து வந்த விவசாயக் கொள்கைகள் நமது பாரம்பரிய விவசாய தொழிநுட்பங்களை அதன் சுவடு தெரியாதபடி அழித்தது மட்டும் இல்லாமல் மேலை நாட்டு விவசாய உத்திகளை நம் விவசாயிகள் மேல் திணித்தார்கள். இதன் பலன் என்ன என்று பார்த்தால் இயற்க்கை வேளாண்மையின் பயிர் சுழற்சி முறையின் தன்மை மாறி நூற்றுகனக்கான ஏக்கர்ளில் ஒரே வகையான பணப்பயிர்களை விளைவிக்கும் புதிய பழக்கம் தோன்றியது; பயறு வகைகளை பயிறுடும் பழக்கத்தில் இருந்து நம் விவசாயிகள் விலகினர்,இந்த பயறு வகைகள் காற்று மான்டலத்தில் உள்ள நைட்டரஜன் சத்தை மண்ணில் பொருத்தும் தன்மை கொண்டவை, பயறு வகைகளை விளைவிக்காததால் மண்ணில் நைட்ரஜன் சத்து குறையத் தொடங்கியது. நமது நட்டின் உள்ளுர் உயிர்ச்சூழல் அமைப்புக்கு ஒத்துவராத தாவரவகைகள் நம் நாட்டில் அறிமுக படுத்தினர்.இதனால் முன்பு இல்லாத நோய்களும் பூச்சிகளும் கூடவே சேர்ந்து அறிமுகமாயின. பூச்சிகளையும்,நோய்களையும் சமாளிக்க செயற்கை உரங்கங்களையும், பூச்சிமருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கினார்கள். நமது மண்ணிற்கு வளம் சேர்த்த பண்டங்களுள் முக்கியமானது எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்குகளும் ஒன்று. எண்ணெய் வித்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் மறைமுகமாக நம் மண்ணிண் வளமும் இங்கிலாந்து போன்ற அயல் நாடுகளுக்கு கடத்தப்பட்டது.

தொழிற்ச்சலைகளின் வரவால் நாம் பாரம்பரிய இந்திய செக்குகள் மறைய தொடங்கின. பாரம்பரிய செக்குகளின் மூலம் எடுக்கப்படும் பிண்ணாக்கு மிகவும் பொடி பொடியாக இருப்பதால் மண் வளத்தை அவை உடனடியாக உயர்த்தின.ஆனால் இயந்திரங்களின் மூலம் எண்ணெய் பிழிந்து எடுக்கப்படும் பிண்ணாக்குகிளில் அத்தகைய தன்மை இல்லை.

நவினமயமாக்கப்ட்ட விவசாயத்தால் நாம் நாட்டின் விலை நிலங்களின் தன்மை மாறியது மட்டும் இல்லாமல் பாரம்பரிய விதைகளையும் தானியங்களையும் அழித்துவிட்டார்கள். சம்பா கிச்சடி, வையக் குண்டான், குதிரைவால், தங்கச்சம்பா, ஆனைக்கொம்பன், செருகமணி, சொர்ணவாரி, டொப்பி, அறுபதாங்குறுவை, வெள்ளைக்கார்,கட்டைச்சாம்பா, பிசானம் மடுமுழுங்கி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, வாடன் சம்பா , குடவாழை, குறுவைக் களையான், குழியடுச்சான், கொட்டாரஞ்சம்பா, இலுப்பைப்பூ சம்பா இது போன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட விதை நெல்வகைகள் நம் விவசாயிகளால் பருவ நிலைக்கு ஏற்றவறு பயிர் செய்யப்பட்டது. அனால் இன்று பத்து வீரிய நெல்ரகங்கல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.


இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியை தாண்டி பெறுகிக் கொண்டே போகிறது. அனைவருக்கும்உணவு அளிக்கவேண்டிய விவசாய துறை நாளுக்குநாள் குறுகிக் கொண்டே போகிறது. முன்பு பெரிய முதலீடு இல்லாமல் விவசாயம் செய்தார்கள் நம் முன்னோர்கள். இன்று பசுமைப் புரட்சியின் தாக்கத்தால் நம் விவசாயிகள் பெரிய அளவு செலவு செய்து செய்ய வேணடிய தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. இதனால் இலாபம் இல்லாமல் செய்யும் தொழிலாகிவிட்ட விவசாயத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் விவசாயிகள் மாற்று தொழிலை நாடியுள்ளனர்.இதானல் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் வாங்கும் சக்தியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.


விவசாயம் என்பது போக்கிடம் இல்லாத முதியவர்களின் தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. இந்த நிலையில் இருந்து மீண்டும் நாம் நமது உழவர்களின் பொது அறிவை பளன்படுத்தி பாரம்பரிய வேளான்முறைகளுக்கு திரும்ப வேண்டியது இன்றைய தேவை . இதை ஊக்குவிக்க நமது அரசு முன்வரும் என்று எதிர்பாப்போம்.

3 கருத்துகள்:

R.DEVARAJAN சொன்னது…

ஆம் ஐயா
கவலையளிக்கும் தகவல்கள்;
பதிவுகளைப் படித்தேன்.
வேளாண்மை சமூகக் கடமை

தேவ்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நவினமயமாக்கப்ட்ட விவசாயத்தால் நாம் நாட்டின் விலை நிலங்களின் தன்மை மாறியது மட்டும் இல்லாமல் பாரம்பரிய விதைகளையும் தானியங்களையும் அழித்துவிட்டார்கள்

அனைத்துமே சிந்தித்து செயல்படுத்தவேண்டிய அவசிய தகவல்கள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி..

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி ஐயா...