புதன், 23 ஜூன், 2010

வேண்டாம் இந்த விபரீதம்

நவீன விஞ்ஞான வளர்ச்சியில் இயற்கையின் அற்புதங்களை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டோம். இதன் வளர்ச்சி ஒரு புறம் ஆக்கபூர்வமாக தோன்றினாலும் மற்றோரு பக்கம் பேரழிவுகளை உண்டாக்குகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.

இந்தியாவில் முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம் ஒன்றை அறிமுகப்படுத்த மரபணுத்தாவர ஒழுங்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய வகை கத்திரிக்காய் ஒன்றுக்கு இந்தியாவின் மிகப் பெரிய தாவர ஆராய்ச்சி நிறுவனமான மராட்டிய மாநிலத்தில் உள்ள மாகிகோ நிறுவனம் அனுமதியளித்துள்ளது. பூச்சிகளால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருக்கின்ற எதிர்ப்பு சக்தி இந்த புதிய வகை கத்தரிக்காயில் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் என எல்லா உயிரினமும் அந்தந்த மரபணுவின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது . இந்த மரபணு பதிவு அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு வருகிறது.

ஜீன் எனப்படும் இந்த மரபணுக்கள் அனைத்தும் புரதங்களால் ஆனது. ஒவ்வொரு புரதமும் பல்லாயிரக்கணக்கான குணாதிசயங்களைக் கொண்டுயிருக்கின்றன. புரதங்களை மாற்றியமைப்பதன் மூலம் உருவாகும் பயிர் வகைகளிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களால் மரணம் கூடநேரலாம். ஒட்டுரகங்கள் மூலம் ஒரு புதிய பயிரை உருவாக்கலாம், இந்த முறையில் மரபணு மாற்றம் இயல்பாக நடைபெருகிறது. ஆனால் இப்போது பயோ டெக்னாலஜி எனப்படும் உயிரியல் தொழில்நுட்பத்தின் ஒரு பிரிவான மரபணு தொழில்நுட்பத்தில் தேவையான புரதங்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்து புதிதாக பி.டி பருத்தி போன்று பி.டி கத்திரிக்காய் கண்டறியப்பட்டுள்ளது.

 B.T. என்பது Bacillus Thuringiensis என்ற நுண்ணுயிரியின் பெயராகும். இது செடிகளை தாக்கும் பச்சைக் காய்ப்புழு, புள்ளிக் காய்ப்புழு, காய்களை துளைக்கும் புழுக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது . எப்படி எனில் பி.டி யில் இருந்து எடுக்கப்பட்ட cry 1 A (c) என்ற விஷப்புரதமானது கத்திரி செடியின் மரபணுவுடன் புகுத்தப்படுகிறது. பின் cry 1 A (c)) என்ற விஷ புரதம் செடியின் அனைத்து பாகங்களிலும் உற்பத்தி ஆகிறது. இதனால் செடிகளை எந்த புழுக்களும் தாக்காது என்று செல்லப்படுகிறது. ஆனால் இதே காரணத்தை செல்லி அறிமுகம் செய்யப்பட்டதுதான் பி.டி பருத்தி. (மகாராஷ்ரா, ஆந்திரா, நமது தமிழகத்தில் தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி செடிகளில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை, மாறாக அப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003 முதல் 2006 வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வுகள் இதை நிருபித்துள்ளன. எனவேதான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்புக்குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் களச்சோதனை முறையில் பயிரிடுவதற்குக் கூட தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தொழில் நுட்பத்திற்கும், இதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது


1960 களில் உணவு பற்றாக்குறையை காரணம் காட்டி பசுமை புரட்சி என்ற பெயரால் கடந்த 50 ஆண்டுகளில் பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை நாம் இழந்திருக்கிறோம் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. வேதி உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் நிலத்தையும், குடிக்கின்ற நீரையும், சுவாசிக்கின்ற காற்றையும் பாழடித்து , அதிலிருந்து மீளமுடியாமல் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலைகளை நாம் பார்த்துவிட்டோம் .

 பசுமை புரட்சி உணவு பற்றாக்குறையை போக்கியது உண்மை ஆனால் அதற்கு என்ன விலை கொடுத்திருக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் இயற்கை விவசாயம், இயற்கை பூச்சிகொல்லி, பாரம்பரிய விதைகளின் மேல் நம்பிக்கை வைக்கும் இந்த காலகட்டத்தில் நாம் மட்டும் ஏன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை அறிமுகம் செய்யவேண்டும் என்ன தோன்றுகிறது .

 உணவு பற்றாக்குறையை காரணம் காட்டி நாம் பாரம்பரிய விவசாய நுனுக்கங்களை அழீக்க நினைக்கிறார்களோ என்று என்ன தோன்றுகிறது . ஏன்என்றால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் இருந்து உருவாகும் தாவரங்களில் கிடைக்கும் விதைகள் மலட்டு தன்மை வாய்ந்தாக உள்ளது அதவது மீண்டும் முலைக்கும் தன்மையற்றது. இத்தகைய விதை ரகங்கள் வேண்டும் என்றால் அவற்றை உற்பத்தி செய்த நிறுவனத்தை விவசாயிகள் நாடவேண்டி இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தான் நாம் இன்று 1500 க்கு மேற்பட்ட விதைநெல்லையும், உணவு தானியவகைகளையும் இழந்து நிற்கிறோம் .

 புவியின் தட்வவெட்பநிலை, பருவ காலங்கள் பல்வேறு காரணிகளால் வேகமாக மாறுபட்டு கொண்டு இருக்கும் சூழலில். உணவு உற்பத்தியில் இயற்கையோடு இணைந்த புதிய தொழில்நுட்பங்களின் தேவையும் அதிகரித் வருகிறது. இந்த தேவையை தனது லாபநோக்கிற்காக பயன்படுத்தி கொள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மனிதன் பல நூறு ஆண்டுகளாக இயற்கையோடு இணைந்து விவசாயம் வெய்து தனது உணவு தேவையை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பூர்த்தி செய்து வந்துள்ளான் . ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு சில நிறுவனங்களின் லபநோக்கிற்காக இற்கை விவசாயம் அழிக்கப்பட்டு மண்ணை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லிகளும், சேயற்கை உரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவுகளை நாம் இன்று உணர ஆரம்பித்து வருகிறோம் .

இப்படி பட்ட காலகட்டத்தில் மனிதனால் செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் நம் மீதும் நமது சூழலின் மீதும் பல தாக்கங்களை ஏற்படுத்தும். சுற்றுச் சூழலையும், மனிதனையும் அழிக்க வெரும் ஆயுதங்கள் மட்டும் அல்ல, உணவுகளும் இப்போதெல்லாம் பயன்படுகின்றன ஆகையால் விழிப்புடன் இருப்போம் மக்களை விழிப்படைய செய்வேம்

அழிந்து வரும் விவசாயம்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் சார்ந்து வாழும் தொழிலின் வளர்ச்சியை பொருத்தே அமையும். இந்தியாவை பொருத்தமட்டில் பெரும்பான்மையோர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழிலையும் செய்து வாழ்கின்றனர். ஆனால் இன்று விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலைக்கு என்னகாரணம் என்று எண்ணத் தோன்றுகிறது . விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கப்படுவதே இதன் முக்கியக் காரணம் . கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு விதமான பொருளாதாரக் கொள்கைகள், தாராளமயமாக்கல் என்னும் முயற்சி பொருளாதார வளர்ச்சியை வியக்க வைக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது . தொழிற்சாலைகள், கணினிநிறுவனங்கள் மற்றும் கேளிக்கை நிறுவனங்கள் என உருவாகியுள்ளது , இதனால் நாட்டின் வருமானம் அதிகரித்திருக்கிறது ஆனால் இத்தகைய வளர்ச்சி ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைமையை கவலைக்கிடமான சூழலுக்குத் தள்ளி விட்டது என்பது தான் வேதனை . இந்தியாவில் மட்டும் சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் 2001 க்குப் பிறகு வறுமையின் காரணமாக தற்கொலை செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் பிரமிக்க வைக்கும் புள்ளி விவரங்கள் நாடுகளின் வளர்ச்சியை வண்ண விளக்குகளும், பங்குச் சந்தைகளும், மேல் நாட்டு முதலீடுகளும், வண்ணக் கண்ணாடிக் கட்டிடங்களும் என உள்ளன ஆனால் மற்றோர் பக்கம் இதற்கு எதிர் சூழல் நிலவுகிறது இதற்கு காரணம் என்ன? விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கப்படுவதே இதன் முக்கியக் காரணம் என்று (ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் சமூக பொருளாதாரக் குழு) தனது விரிவான ஆய்வின் மூலம் தெரியப்படுத்துகிறது. விவசாயிகளின் நலன்களில் அரசு காட்டிய மெத்தனமும், விவசாயநிலங்களை பாதுகாப்பதில் அரசு முக்கியத்துவம் கொடுக்காததும் தான் வறுமைக்கு காரணம் என மிகத் தெளிவான ஒரு பதிலை இந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது . இந்தியாவில் வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 60% மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவர்களை இத்தனை காலமாக அரசுகள் முழுமையாக கண்டுகொள்ளாததன் விளைவாக ஒட்டுமொத்த சமூகத்தையும் இன்று பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது தெளிவாகியுள்ளது . விவசாய நிலங்கள் பல்வேறு விவசாயம் சாராத திட்டங்களுக்காக அழிக்கப்படுவதால் விவசாயிகள் தங்கள் வாழ்கைக்காக விவசாயத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் நிலவுகிறது. விவசாயிகள் விவசாயத்தினால் தன்னிறைவை எட்ட முடியாத அவலம் உருவாகியிருப்பதும் இன்றைய நிலைமைக்கு முக்கிய காரணமாகும். ஆனால் அனைத்து அரசுகளும் தங்கள் கவனங்களை விவசாயிகள் மீது செலுத்தாமல் நிராகரித்துள்ளது. இந்த நிலைமை மிச்சம் இருக்கும் விவசாய வளர்ச்சியை அழிவுக்குள் தள்ளியிருப்பதுடன், புதிதாக மக்கள் விவசாய வாழ்கைக்குள் நுழைவதையும் நிறுத்தியிருக்கிறது. இதனால் விவசாயிகளிடம் வாழ்வதற்கான நம்பிக்கையின்மை வளர்ந்து கொண்டு இருக்கிறது . விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் போது நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் வறுமை விலகும் என்பதர்க்கு உதாரணமாக பல நாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சீனாவில் 1980 களில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போது வறுமை நிலவரம் பாதியாகக் குறைந்திருக்கிறது. தொடர்ந்து விவசாயிகள் அலட்சியப்படுத்தப்பட்டால் விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குறைவான உற்பத்தி, விவசாயத்திற்கு தேவையான பொருட்களின் விலையேற்றம், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை, சந்தை கொள்முதல் விலை குறைவு. உற்பத்திப் பொருட்களை விற்பதற்குரிய வழிகள் இல்லாமை, காலநிலை மாற்றங்கள் தரும் அழிவுகளுக்கான போதிய பாதுகாப்பின்மை என பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் இன்று தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒன்று மட்டும் உண்மை விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக வறுமையில் வாடுவோர் எண்ணிக்கையும். வறுமையின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை . விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும் போதும். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச வாழ்க்கை உத்தரவாதம் வழங்கப்படும் போதும் மட்டுமே வறுமை சமூகம் நிமிரவும், சமநிலையற்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சற்று சமநிலையை அடைய முடியுமே தவிர மற்ற சலுகைகளையோ, இலவச திட்டங்களையோ ஒருபோதும் வறுமையினை ஒழித்துவிட முடியாது. அரசு தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளின் மீதான பார்வையை விவசாயிகளின் மேல் திருப்பும் காலம் வந்துவிட்டது . இந்த சமயத்தில் விழித்துக் கொள்ளவில்லை என்றால் மிகவும் கடுமையான உணவு பஞ்சத்தை சந்திக்க நேரிடும் . விவசாய வளங்களை மேம்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், விவசாயிகளுக்குத் தேவையான போக்குவரத்து, சந்தை போன்ற வசதிகள் செய்து தருவதும், அவர்களுக்கு இழப்பீடு, காப்பீடு என திட்டங்கள் வகுப்பதும் வளமான எதிர்காலத்தின் அவசியமாகும். மனித வளம் என்பதும், பொருளாதார முன்னேற்றம் என்பதும் கணிணியின் குளிரூட்டப்பட்ட அறைகளில் நிர்ணயம் செய்யப்படுவதல்ல. அவையெல்லாம் வெறும் மாயைகளே. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலே ஆட்டம் காணும் நிலைமை தான் அவற்றுக்கு. ஆனால் விவசாயம் அப்படியல்ல. ஒட்டுமொத்த பசுமைப்புரட்சி நிலையான வளத்தை நல்கக் கூடியது. மேல்நாட்டு பொருளாதார சட்ட மாறுதல்களால் அழிக்க முடியாத தன்னிறவை விவசாயம் தரும் என்பதை மீண்டும் ஒரு முறை அரசுகள் உணர வேண்டும். .