வெள்ளி, 9 மார்ச், 2012

கிட்னியை விற்று பிழைப்பு நடத்தும் மேற்க்குவங்களத்து விவசாயிகள்




மேற்குவங்காள மாநிலத்தில் பசியை போக்க ஆண்களும், பெண்களும் கிட்னியை விற்கும் அவலம் நிலவி வருகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் பல கிராமங்களில் வறட்சியும், பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அரசியல்வாதிகள் வாய் கிழிய பேசினாலும் இவர்களின் அவல நிலையை போக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

இதனால் சாராயம் காய்ச்சி விற்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. சில கிராம மக்கள் பஞ்சத்தையும், பட்டினியையும் சமாளிக்க தங்களது கிட்னியை விற்பனை செய்கின்றனர்.

இதனால் சில கிராமங்களை 'கிட்னி கிராமம்' என்று அழைக்கின்றனர். அந்த கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், ஒரு கிட்னியுடன் தான் உயிர் வாழ்கின்றனர். வடக்கு டியாஞ்ச்பூர் மாவட்டத்தில் உள்ள பிந்தால் கிராமம், கிட்னிக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும்.


இங்குள்ள மக்களிடம் இருந்து பெறப்படும் கிட்னி மாநில தலைநகர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர், பழங்குடியினர்.

இவர்களின் பிழைப்புக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது விவசாயம்தான். சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால், பூமி வறண்டு விட்டது. நெல்லோ, கோதுமையோ சாகுபடி செய்ய முடியவில்லை. விவசாயம் கைவிட்டதால், வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்று வருகின்றனர். இதிலும், அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டதால் வருமானம் குறைந்து, கிட்னியை விற்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கிட்னி விற்பனைக்கு ஏற்பாடு செய்வதற்கு என்றே புரோக்கர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் கிட்னி ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், கிட்னி கொடுக்கும் கிராம மக்களுக்கு சொற்ப தொகையே தருகின்றனர். அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய் வரைதான் கொடுக்கின்றனர்.

கிராம மக்களின் பசியையும், அறியாமையையும் பயன்படுத்தி புரோக்கர்கள் லட்சம், லட்சமாக சம்பாதிக்கின்றனர். கிட்னியை விற்கும் இளைஞர்கள் நாளடைவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலை எதுவும் செய்ய முடியாமலும் போகிறது. அப்படிப்பட்டவர்கள் பெற்றோர் அல்லது மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

ஆண்களில் பெரும்பாலானோர் தங்களது ஒரு கிட்னியை விற்று விட்டனர். இதில் கிடைத்த பணம் கரையத் தொடங்கியதும், தங்களது மனைவியும் கிட்னியை விற்குமாறு வற்புறுத்துகின்றனர். இப்போது பெண்கள்தான் அதிகளவில் கிட்னியை விற்கின்றனர்.

ஒரு கிட்னியை இழப்பதால் ஏற்படும் உடல் சோர்வையும், குடும்பத்தில் நிலவும் வறுமையையும் மறக்க குடும்பத்தோடு சாராயம் குடிக்கின்றனர். இதுதான் தங்களை சந்தோஷப் படுத்துவதாக, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் இங்கு நடத்திய ஆய்வில், கிட்னியை விற்ற பலர் சில ஆண்டுகளிலேயே இறந்து போனது தெரியவந்தது. இந்த அவல நிலையை போக்க தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசை அந்த தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

புதன், 15 பிப்ரவரி, 2012

விவசாயின் குரல்: சில்லறை வணிகத்தில் அந்நி முதலீடு! விவசாயிகளை வாழ ...

விவசாயின் குரல்: சில்லறை வணிகத்தில் அந்நி முதலீடு! விவசாயிகளை வாழ ...: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும் மசோதாவொன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. பெருவாரியான மக்கள் இதனை எதிர்த்து...

சில்லறை வணிகத்தில் அந்நி முதலீடு! விவசாயிகளை வாழ வைக்குமா?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும் மசோதாவொன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. பெருவாரியான மக்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்னிய முதலீடுகளை சிறுவணிகத்தில் அனுமதிக்கும் போது கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. 

* சிறுவணிகத்தின் வளர்ச்சி 13 சதவீதம் உயரும்.

* சர்வதேச உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப் பொருள்கள் விற்க முடியாமல் வீணாகிறது. எனவே உணவு பொருள் வீணாகுவதை தவிர்க்கலாம்

. * விவசாயிகள் நன்மை பெறுவார்கள் அதே வேலையில் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும்.

 * விலைவாசி குறையும்.

 உடலில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத எவரேனும் இருந்தால் என்னோடு வாருங்கள். ஐரோப்பிய ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அழித்து விட வேண்டும்." என்று 1801 அன்று வணிகம் செய்ய வந்து நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு அடியோடு விரட்ட மக்களை அறைகூவல் விடுத்தார் சின்ன மருது. 

இன்று இந்திய அரசு அன்னியர்களை பட்டு கம்பலம் விரித்துக்கொண்டு அழைக்கிறது,. அன்னியர்களே வாருங்கள் வாருங்கள் வந்து விரும்பிய வண்ணம் வாணிபம் செய்யுங்கள் செய்யுங்கள் " என்று அன்னியர்களை அறைகூவல் இட்டு அழைக்கிறது மத்திய அரசு. 

சிறுவணிகத்தின் வளர்ச்சி 13 சதவீதம் உயரும்!"

இவர்கள் நன்மை என்று எதை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. சில்லறை வணிகம் என்பது என்ன? என்றே இவர்களுக்கு தெரியவில்லை. கிராமங்களில் வடை சுட்டு விற்கும் பாட்டி, கடை கடையா ஏறி கடலை மிட்டாய் போடும் தாத்தா, முதல் நகரத்தில் பலசரக்கு கடை நடத்துபவர்கள் வரை அனைவரும் சிறு வியாபாரிகள் அல்லது சிறு வணிகர்கள்தான். இவர்கள் குறைந்த அளவு முதலீடு போட்டு அதிக உடல் உழைப்புடன் செய்யும் வணிகம் தான் சிறு வணிகம். இந்த வணிகத்தில் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தால் அந்த வணிகம் எப்படி சிறுவணிகமாக இருக்க முடியும். மிகப்பெரிய வணிகமாக அல்லவா மாறிவிடும். அன்னிய முதலீட்டுக்கு பின் இல்லாத ஒரு வணிகம் எப்படி 13 சதவீத வளர்சி அடையும். மிகப்பெரிய பொருளதார மேதைகளுக்கு இந்த சிறு வணிக பொருளாதாரம் பற்றி அறியாமல் போய்விட்டதோ என்று என்ன தோன்றுகிறது. 

சர்வதேச உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப் பொருள்கள் விற்கமுடியாமல் வீணாகிறது. எனவே உணவு பொருள் வீணாகுவதை தவிர்க்கலாம்" இது தான் உண்மையா? 

பொருள் வீணாகிறது என்று அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது. உலகில் எந்த அரசும் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு இந்த மாதரி ஒரு காரணத்தை கூறாது. டிசம்பர் 19 , 2011 அன்று டில்யில் மத்திய அரசின் இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கிடங்கிகளில் இருந்து 2010-11 ஆண்டில் ஒரு லட்சத்து 56 டன் தானியங்களும், 2009-10 ஆண்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் டன் தானியங்களும், 2008-09 ஆண்டில் 58 ஆயிரம் டன் தானியங்களும் சேதமடைந்துள்ளதாக மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கே.வி. தாமஸ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்." இந்திய விவசாயிகள் அரும்பாடுப்பட்டு விளைவிக்கும் உணவு தானியங்களை அரசின் அறிவின்மையால் வீணாக்கிவிட்டு, அன்னிய முதலீடுகளை அனுமதித்தால் சரியாகிவிடும் என்று சப்பை கட்டு கட்டுவது சரியல்ல.


 விவசாயிகள் நன்மை அடைவார்களா? 

 சிறு வணிகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதித்தால் முதலீடு செய்யப் போவது குப்பனும், சுப்பனும் அல்ல. வால்மார்ட் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தான் முதலீடு செய்வார்கள். இது போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகைக்கு பின்னால் தான் இந்திய விவசாயம் அழிவுப் பாதையை நோக்கி தள்ளப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

 பசுமைப் புரட்சிக்குப் பின் பாரம்பரிய மரபுசார் விதை ரகங்கள் அழிந்து போய் தற்போது விதைக்கும் கூட பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து செய்யப்பட்டு அவை உர முதலாளிகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறிக்கொள்ளும் பொருளாதார வல்லுநர்கள், விவசாயம் 0.5 சதவீதமாக தேய்ந்து வருவதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. 1980 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36.4 சதவீதமாக இருந்த விவசாயம், 2008-ம் ஆண்டுக்குப் பின் 17 சதவீதமாக வீழ்ந்துள்ளது. 

தொண்ணூறுகளின் துவக்கத்தில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசு விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் மானியத்தை குறைக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. உள்நாட்டு விவசாயத்தை அழித்து நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழித்துக் கட்டுவதன் மூலம், இந்த சந்தையை பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் சிக்க வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும். 

விவசாயத்தை அரசின் பொறுப்பில் இருந்து கைகழுவி அதை அந்நிய தொழிற் நிறுவனங்களுக்கு முழுமையாக தாரைவார்த்து கொடுக்கும் நோக்கம் தான் அன்னிய நாட்டு முதலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பது. இந்த செயல் எப்படி விவசாயத்தை வளரச்செய்யும் என்று தெரியவில்ைலை. அழிவின் உச்சியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இந்த அன்னிய நாட்டு முதலீடு எப்படி காப்பாற்றும் என்று நம்புகிறார்கள் என்றும் தெரியவில்லை. அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளையும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்டு கடனாளியாகித் தற்கொலை செய்துகொண்ட மராத்திய விவசாயிகளையும் மத்திய அரசு மறந்தது ஏனோ என்று தெரியவில்லை. 

சிறுவணிகத்தில் அன்னிய முலீட்டை அனுமதிக்கும் பட்சத்தில், விவசாய உற்பத்தி பொருளுக்கு அதிக விலை கிடைக்கும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் பொருள் விற்கப்படும் என்று சொல்லுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்" இருக்கிறது. அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்கி குறைந்த விலைக்கு விற்பதற்கு எந்த முதலீட்டாளர்கள் முன்வருவார்கள் என்று தெரியவில்லை. 

சிறு வணிகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்யவா? இல்லை. இவர்களின் நோக்கம் முதலீடு செய்து இலாபம் ஈட்டுவதே. இவர்கள் எப்படி அதிக விலைக்கு பொருள் வாங்கி குறைந்த விலைக்கு விற்பார்கள். 

சிறு வணிகத்தில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுதான் விவசாய உற்பத்திப் பொருள்களை வாங்குவார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில், பொருள்களின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கில் வைத்துக் கொண்டுதான் விலை நிர்ணயித்து வாங்குவார்களே தவிர, விவசாயிகள் என்ன விளைவித்து கொடுக்கிறார்களோ அதை அந்த நிலையிலேயே வாங்க எந்த கார்ப்ரேட் நிறுவனமும் முன் வராது. தரம் பிரித்துதான் வாங்குவார்கள். இந்த நிலை விவசாயிகளை அதிக பாதிப்புக்குள்ளாக்கும்.

 முதலீடு செய்யும் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு முன்பணம் என்கிற பெயரில் கடன் கொடுத்து அவர்களது உற்பத்தியை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொள்ளும். ஆரம்பத்தில் இனிக்கும் இந்தச் சலுகை விரைவிலேயே விவசாயிகளின் கழுத்தில் விழும் சுருக்காக மாறி விலை நிர்ணயம் பெரு நிறுவனங்களின் தனி உரிமையாக மாறிவிடும்.

உண்மையில் விலைவாசி குறையுமா? 

விலைவாசி குறையும் என்ற கூற்று எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. விலைவாசி உயர்வதற்கு இடைத்தரகர்கள்தான் காரணம். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கும் போது இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள். நிறுவனங்களே பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வாதம் எப்படி இருக்கிறது என்றால் உணவுப்பொருள் விலைவாசி உயர்வுக்கு காரணம் எல்லாம் இடைத்தரகர்கள் தான் என்று கூறுவது படிக்கத் தெரியாதவன் ஏட்டை குறை சொன்னானாம்" என்பது போல் உள்ளது. 

உண்மையில் விலைவாசி உயர்வுக்கு இதுவா காரணம்?

முறைப்படுத்தப்படாமல் உள்ள சில்லறை வர்த்தகம், உணவு தானியத்தை இணையதள வர்த்தகத்தில் ஈடுபடுத்தியது, கட்டுபடுத்தவியலாத பங்குசந்தை சூதாட்டம். இவைதான் முக்கிய காரணம். இந்த குறைகளை களைவதற்கு அரசு இதுவரையில் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. மாற்றாக, இவற்றை மேன்மேலும் உரமிட்டு வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் நிலைப்பாடு.

 2013 விளையபோகும் ஒரு பொருளுக்கு 2012 ல் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுதான் அன்னிய நிறுவனங்கள் வாங்குவார்கள். இப்படி இன்னும் விளையாத ஒரு பொருளுக்கான ஒப்பந்த பத்திரத்தை பங்கு சந்தையில் ஏலம் விடுவார்கள். அப்போது அந்த பொருளின் மதிப்பு, சந்தை மதிப்பை விட பல மடங்கு உயர்ந்து போகும். ஆனால் இந்த நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்த விலைக்கே பொருள்களை கொள்முதல் செய்வார்கள். இந்த நிலை விளைவித்த விவசாயிகளுக்கு விளைபொருள்களின் மேல் உரிமை இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடும். இதனால்தான் உணவுப் பொருள் விலை அதிகரிக்குமே தவிர, இடைத்தரகர்களால் தான் என்று கூறுவது சரியல்ல.

 இது போன்ற பல்வேறு வழிகளில் விவசாயத்தை திட்டமிட்டு அழித்து விட்டு அதன் வினியோக வலைப் பின்னலை பன்னாட்டு கம்பெனிகளிடம் கொடுத்து விடுவதன் மூலம் விலை குறையும் என்று சொல்லுவதும், விவசாய விளைபொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டத்தை தடை செய்யாமல் விலை வாசி உயர்வையும் கட்டுபடுத்த முடியாது. விவசாயத்தையும் வாழ வைக்க முடியாது.

 அரசு செய்ய வேண்டியது.

இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள்(22320000000000) ஆக 2012 இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 

இந்த அளவு வர்த்தகம் நடக்கும் சில்லறை வணிககத்தில் வெறும் 3 % மட்டுமே முரைபடுத்தப்பட்ட வர்த்தகமாக நடைபெறுகிறது, 97 சதவீதம் சரியாக முறைப்படுத்தப்படமால் உள்ளது. மிகப்பெரிய பணபுழக்கம் உள்ள ஒரு வணிக அமைப்பை முறைபடுத்தாமல் இருக்கும் பச்சத்தில் அன்னிய முதலீடுகளை அதில் அனுமதிப்ப என்பது சரியானது அல்ல. ஆகவே முதலில் இந்த சிள்ளறை வர்த்தகத்தை முதலில் முறை படுத்த வேண்டும்.

 விவசாய உற்பத்தி பொருள்களை பாதுகாத்து வைப்பதற்கு வட்டம் அல்லது மாவட்டடம் தோரும் சோமிப்பு கிடங்குகள் அமைத்து அதை முறையாக பாரமரிக்க வேண்டும். 

கிராமங்கள் தோரும் விளைவிக்கப்ப படுகின்ற விவசாய பொருட்களை அந்த அந்த காலகட்டத்தில் முறையாக கணக்கிட்டு, அதன் அடிப்படையிலும், விவசாய இடுபொருள்களின் விலையின் அடிப்படையிலும், மற்றும் உற்பத்தி செய்கின்ற செலவினங்களையும் கணக்கீட்டு அதன் அடிப்படையிலும் அரசே கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை இரண்டையும் நிர்னயிக்க வேண்டும். 

புதன், 16 மார்ச், 2011

கடன் தொல்லை காரணமாக இந்தியாவில் 12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை

கடன் தொல்லை காரணமாக இந்தியாவில் 12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.




15 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த அவலநிலையை போக்க மத்திய மாநில அரசுகள் பெரிய அளவில் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என விவசாய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளளனர்.இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த 1990 களில் தான் வெளிச்சத்துக்கு வந்தது.சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதாலும் சில நேரங்களில் அதிகப்படியான மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பது இல்லை.இதனால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கிய விவசாயிகள் வட்டியையும் முதலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.கந்து வட்டிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.சில சமயங்களில் கடன் தொல்லை தாங்க முடியாத விவசாயிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாபமும் அரங்கேறுகிறது.



தேசிய குற்றப் பிரிவு ஆவணத்தில் இந்தியாவில் கடந்த 1997 இல் இருந்து இதுவரை இரண்டு இலட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.கடந்த 15 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளை கணக்கில் எடுத்துப் பார்த்தால் 12 மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை கொள்கிறார்.அதாவது தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய விவசாய அமைச்சராக பதவி வகிக்கும் சரத்பவாரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது.மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக ஆந்திரா,கர்நாடகா, மத்திய பிரதேச, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது.இந்த பிரச்சினைக்கான காரணம் குறித்து விவசாய நிபுணர்கள் கூறுவதாவது;



விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் சில நடவடிக்கைகள் எடுத்தன.விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வழங்குவது கடன் தள்ளுபடி வழங்குவது இழப்பீடு மற்றும் உதவித் தொகை வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.ஆனால் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக இல்லை.விவசாயத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற போதுமானதாக இல்லை.ஆகவே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் இங்கு தொடர்கதையாகிறது.இவ்வாறு விவசாய நிபுணர்கள் தெரிவித்தனர்


தினமலர்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

அதிகரிதுகொண்டு வரும் விவசாயிகளின் தர்கொல்லைகள்

இந்தியாவில் சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து உள்ளது. விவசாயிகளின் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற தகவல் மையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி கடந்த ஆண்டில் (2009) 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். இது 6 ஆண்டுகளில் இல்லாத மோசமான எண்ணிக்கை ஆகும்.
 
இதில் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். 62 சதவீதம் பேர் இந்த மாநிலங்களில் தற்கொலை செய்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
 
2008-ம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து இருந்தனர். அதை விட 2009-ம் ஆண்டில் கூடுதலாக 1172 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்.
 
கடந்த ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 2,872 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டு களில் அங்குதான் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்து வருகிறது.

அதற்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் 2,282 பேர் தற்கொலையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் 2,414 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,395 பேரும், சத்தீஷ்கரில் 1,802 பேரும் தற்கொலை செய்தனர்.
 
1997-ம் ஆண்டில் இருந்து 2,16,500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற தகவல் மையம் தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் மட்டும் 44,276 பேர் தற்கொலை செய்து உள்ளனர். 
 
நன்றி-  மாலை மலர்
 
 
 

வியாழன், 16 டிசம்பர், 2010

தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டம் - அமைப்பும் செயலாக்கமும்.

தமிழக அரசின் திட்டங்களில் மிக முக்கியமானது சத்துணவுத் திட்டம்.  இது அகில இந்திய அளவில் பாராட்டப் பெறுகின்றது. பள்ளிகளில் பயிலும் ஏழைச் சிறுவர் சிறுமியர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் இன்றைய நிலையில் உற்று நோக்குகின்றபோது, செயல்படுவதில் கண்காணிக்கப்படும் தொய்வுகள் இருப்பதனை அறிய முடிகின்றது. எனவே உயரிய நோக்குடன் தீட்டப்பட்ட இத்திட்டத்தின் பயன்கள் முழுமையாக ஏழைச் சிறார்களைக் சென்றடைவதில்லை.

 இதிலுள்ள ஓட்டைகள் ஊழலுக்குத் துணை போவதாக உள்ளன.    என்று, 1925ம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்த சர். பி.டி. தியாகராசர் நகர அளவில் சிறியதாக மதிய உணவுத் திட்டத்தைத் துவங்கினார். அதன்பின்னர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் பொறுப்பேற்றபோது இத்திட்டத்தை மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் தமிழ் நாடெங்கும் விரிவு படுத்தினார். பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வரானவுடன் மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.

பள்ளிக்குச் செல்லும் ஏழைச் சிறார்கள் தங்கள் பெற்றோரின் வறுமையான குடும்பச் சூழலில் பட்டினி கிடந்து அதனால் அவர்கள் பயிலும் கல்விக்குப் பாதிப்பு வந்து விடக் கூடாது என்ற அரிய உன்னத இலட்சியத்தின் அடிப்படையில் அவர்களது பசியை ஆற்றி கல்வியைத் தொடர வழி செய்யும் நோக்கத்துடன் இத்திட்டம் துவங்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள கிராமங்களில், நகரங்களிலுள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ மாணவியருக்கு ஆரம்பத்தில் அரசு நிர்ணயித்த விகிதத்தின்படி அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சமைத்து மதிய வேளையில் கலவைச் சாதமாக வழங்கப்பட்டது.

இத்திட்டம் மேலும் வளர்ச்சிப்பெற்று ஏற்கனவே வழங்கப்பட்ட உணவுடன் சுண்டல், பச்சைப் பருப்பு, உருளைக் கிழங்கு, வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை அல்லது வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இத்திட்டம் செயல்பட ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோர் மாதத் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்றுள்ள நிலையில் இத்திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்கின்றபோது பயன்கள் முழுமையாக ஏழைச் சிறார்களைச் சென்றடைவதில்லை என்பது கண்கூடு.

பொதுவாகவே அரசின் பெரும்பான்மையான திட்டங்கள் அவை தீட்டப்பட்ட நோக்கத்தின்படி மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்று பல சமுதாய ஆர்வலர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சத்துணவுத் திட்டத்தைப் பொறுத்த அளவில் அதில் குறை ஏற்படக் காரணமானவர்களே அதில் பணியாற்றும் ஊழியர்களும் உரிய முறையில் கண்காணிக்காத சில மேற்பார்வை அலுவலர்களும்தான். அண்மையில் நடைபெற்ற முட்டை சாப்பிடாத மாணவ, மாணவியர்க்கு வாழைப்பழம் வழங்கும் துவக்க விழாவின் போது கூட இதில் முறைகேடு எதுவும் செய்யக்கூடாது என்று மாண்புமிகு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இதற்கு முறைகேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்ற ஐயந்தான் காரணம். சத்துணவு மையங்களின் குறைபாடுகள் இப்போதுதான் என்றில்லை. ஆரம்பம் முதலே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் களைய தணிக்கை செய்யும் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆயின் அவை போதுமானதாக இல்லை. குறைகள் தொடர்கின்றனவே ஒழிய நீங்கியபாடில்லை. சமுதாய நலனில் அக்கறையுடன் ஏழைச் சிறார்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ஏமாற்றுவதற்கு முயற்சிக்காமல் தங்கள் கடமையினைச் செய்திட சத்துணவு மையங்களின் ஊழியர்கள்தான் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் முழுமையடையும்.

இதில் சத்துணவு மையங்களின் செயல்பாடு குறித்து அரசின் நோக்கமும் அது செயல்படும் முறையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அது இணைக்கப்பட்ட கல்விக் கூடத்தில் பயிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மாணவ, மாணவியர்களின் பெயர்கள் விவரம் குறித்த பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதில் அன்றாடம் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களை பள்ளியின் வருகைப் பதிவேட்டில் கண்டவாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளரால் குறித்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அரசு வகுத்துள்ள விகிதாச்சாரப்படி அரிசி, பருப்பு, காய்கறிகள், முட்டை போன்றவற்றைக் கணக்கிட்டு, எடுத்து, சமைத்து வழங்கவேண்டிய பணி அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோரைச் சாரும்.

வருகை புரிந்துள்ள மாணவ, மாணவியருக்குச் சேர வேண்டிய விகிதத்தின்படியான உணவுப் பொருட்களை எடுத்துச் சமைப்பதற்குப் பதிலாக, அதற்கும் குறைவான அளவில் பொருட்களை எடுத்துச் சமைத்து உணவு வழங்கப்படுகின்றபோது சோதித்துப் பார்த்தால் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் அரசு குறிப்பிட்ட எடையுள்ள சோறு, சாம்பார் ஆகியவை வழங்கப்படாத நிலை பெரும்பான்மையான பள்ளிகளில் உள்ளது.

இது தவிர மதிய உணவு வழங்கப்படுகின்றபோது முன்னறிவிப்பின்றி சென்று பார்த்தால் வருகைப் பதிவேட்டில் கண்ட மாணவ, மாணவியர் எண்ணிக்கையை விடக் குறைவானவர்களே உணவருந்திக் கொண்டிருப்பார்கள். இது குறித்து அபை்பாளரிடம் கேட்டால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களில் பலர் தங்கள் வீட்டில் விசேஷமென்றும் ஊரில் திருவிழா என்றும் கூறிவிட்டு, மையத்தில் மதிய உணவு கொள்ளாமலே சென்று விட்டார்கள் என்ற பதில் உடனடியாகக் கிடைக்கும்.

சத்துணவுப் பொருட்கள் வரவு செலவு குறிக்கும் இருப்புப் பதிவேட்டினைப் பார்த்தால் காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்கள் குறித்த வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலேயே உணவுப் பொருட்கள் கணக்கிடப்பட்டு, எடுத்து, சமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருகைப் பதிவேட்டிற்கும் குறைவான மாணவர்களே மதிய உணவு சாப்பிடுகிற நிலையில் காலையில் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உணவு மிகுதியாகவே இருக்க வேண்டும். அனால் அப்படி இருக்காது. சாப்பிடுகின்ற மாணவ, மாணவியர்க்கும் அரசு குறிப்பிட்ட எடையை விடக் குறைவான அளவு உணவே பரிமாற்றப்பட்டிருக்கும். அப்படியாயின் பள்ளி வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் கணக்கிட்டு எடுக்கப்பட்ட உணவுப் பொருட்களில் சமையலுக்குப் பயன்படுத்தியது போக மீதியுள்ளவற்றை சத்துணவுப் பணியாளர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்கு சுருட்டி எடுத்துச் சென்று விட வாய்ப்பிருக்கிறது.

அதுவே இன்று பெரும்பாலான பள்ளிகளில் நடந்து கொண்டும் இருக்கிறது. முட்டைகள் வழங்கும் விவகாரத்தில் சொல்லவே வேண்டாம். வருகைப் பதிவேடு எண்ணிக்கைக்குக் குறைவாகவே முட்டைகள் வழங்கப்படுகின்றன. அல்லது அரைமுட்டை வழங்கும் நிலையைக் கூட சில பள்ளிகளில் காண நேரிடுகிறது. காரணம் கேட்டால் முட்டைகளை அவித்துப் பார்ததபோது அவை கெட்டுவிட்டிருந்ததெனக் கூறுவர். சில மையப் பொறுப்பாளர்கள் முட்டைகள் குறைவாகவே தங்கள் மையங்களுக்குக் கொடுக்கப்பட்டதென்ற உண்மையை உளறி விடுவதும் உண்டு. தணிக்கை செய்யும் அலுவலர்கள் உண்மையுடனும் உறுதியுடனும் செயல்பட்டு, தங்கள் தணிக்கையின்போது உணவுப் பொருட்களின் இருப்பை, இருப்புப் பதிவேட்டில் கண்ட அளவு அல்லது எண்ணிக்கையுடன் சரியாக எடை போட்டோ அல்லது எண்ணியோ ஒப்பிட்டுப் பார்த்தால் பெருத்த வேறுபாடு நிச்சயம் இருக்கும். இதனை அவர்கள் தணிக்கையின் போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில்தான் கையூட்டும் ஊழலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் ஒரு பகுதி ஊழலில் உளறிக் கிடக்கும் மேற்பார்வை அலுவலர்களின் வீடுகளக்கோ அல்லது தேவைப்படும் வியாபார இடங்களுக்கோ சென்று விடும் போக்கும் உள்ளது.

இதற்கு அண்மையில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த பொதக்குடி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மையத்திற்கான முட்டைகள் லட்சுமாங்குடி டாஸ்மார்க் மதுபான பாரில் கொடுக்கப்பட்டு மையப் பொறுப்பாளர் மாட்டிக் கொண்டதே ஓர் உதாரணம். இதே நிலைதான் பல சத்துணவு மையங்களில் உள்ளது. ஆனால் செய்தியாக வரவில்லை. அவற்றை நிரூபிப்பதென்பது மிக எளிதான செயல். ஆனால் அதிகாரம் பெற்ற சில குறிப்பிட்ட அலுவலர்களும், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பனர், அமைச்சர் அல்லது மேற்பார்வைக் குழு உறுப்பினர்கள் போன்ற குறிப்பிட்ட சிலர் மட்டுமே சத்துணவு மையங்களை சோதனையோ அல்லது தணிக்கையோ செய்யலாம் என்றிருக்கின்றபோது பொதுமக்களோ அல்லது ஊழலை ஒழிக்கப் புறப்படும் ஆர்வலர்களோ வெளியிலிருந்து கொண்டு என்ன செய்ய முடியும்?

நேர்மையுள்ள அரசு தணிக்கை அலுவலர்களின் செயலாக்கம் இங்கு எட்டுவதில்லை. அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட சத்துணவு மைய அமைப்பாளருக்கு விளக்கம் கோரி உயர் அலுவலர்கள் குறிப்பனுப்பலாம். பிறகு சிறிது காலம் கூட பணியிடை நீக்கம் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் சத்துணவு மைய ஊழியர்களின் நியமனங்களே அரசியல் கட்சிகள் சார்புடையனவாக இருப்பதால் அரசியல் பிரமுகர்களின் தலையீடு காரணமாக தவறிழைத்தோர் தப்பி விடுகின்றனர். பிறகு என்ன? இவ்வூழல் தொடர் கதையாகி விடுகிறது. ஏழைக் குழந்தைகளுக்குத் தங்களால் தருமம் செய்ய இயலவில்லையென்றாலும் அரசு அவர்களுக்குச் செய்கின்ற உதவிகளில் தங்களை இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக, சுரண்டுகின்ற பேர்வழிகளை எவ்வாறு அழைப்பது?

இதனையே சத்துணவு மையங்கள் தணிக்கையின்போது நேர்யைுள்ள அரசு அலுவலர்கள் எடுத்துரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கிறது.இதற்குத் தீர்வுதான் என்ன?  முதலில் எல்லா தணிக்கை அலுவலர்களும் இத்திட்டத்தின் உயரிய உன்னத நோக்கத்தைக் கருத்தில் கொண்டு நினைத்தாலும் ஏழைக் குழந்தைகளுக்குத் தங்களால் செய்ய முடியாத தருமத்தை அரசு தங்களுக்கு அளித்திருக்கும் பணியின் மூலமாகச் செய்கிறோம் என்ற மனசாட்சியுடன் உண்மையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும்.

 இதில் எவ்வாறான குறுக்கீடுகள் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாத, தேவையாயின் எதிர்த்து நிற்கக் கூடிய தெளிவான நிலையும் திண்ணிய நெஞ்சமும் அவர்களுக்கு வேண்டும். இரண்டாவது, சத்துணவு மைய அமைப்பாளர்கள் இப்பணியை ஏற்க ஒப்புக் கொண்ட வகையில் தங்கள் ஊதியம் போன்றவை எப்படியிருந்தாலும், பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்காகத் தாங்கள் செய்யும் இப்பணி தாய் நாட்டிற்குச் செய்யும் தருமத்தின்பாற்பட்ட பணி தவத்திற்கும் மேலானது என்ற சேவை மனப்பான்மையுடன் ஒவ்வொரு நாளும் இயங்க வேண்டும்.மூன்றாவது, உணவுக் கிடங்குகளிலிருந்து உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பாளர்கள் ஏழைக் குழந்தைகளுக்கான இத்திட்டம் அறத்தின்பாற்பட்டது எத்தனை கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டாலும் அதனைவிடப் புனிதமானது புண்ணியம் சேர்ப்பது என்று உணர்ந்து பட்டியலிட்ட முழுப் பொருள்களையும் அதில் கண்டவாறு சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வைப்பதோடு குடிமைப் பொருள்கள் வழங்குதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேற்பார்வை அலுவலர்கள் அவை லாரிகளில் செல்லும் வழியில் இடையிடையே முன்னறிவிப்பின்றி தணிக்கை செய்து முழுமையாக போய்ச் சேர்வதையும் உரியவாறு திட்டமிட்டுக் கண்காணக்க வேண்டும்.நான்காவதாக, ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர் வருகை எண்ணிக்கை, அவர்களுக்கான விகிதாச்சாரப்படி பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் அளவு, அன்று கொடுக்கப்படும் முட்டைகள் மற்றும் வாழைப் பழங்களின் எண்ணிக்கை, இருப்பு விவரம் ஆகயிவற்றைக் குறிக்கும் தகவல் பலகை ஒன்றினை சத்துணவு மையத்தின் முன்பு பொதுமக்கள் பார்வையில் படும் வண்ணம் வைக்க வேண்டும்.

இதனால் தவறுகள் நேர்ந்தால் ஊர்ப் பொதுமக்களே தட்டிக் கேட்பது சாத்தியமாவதோடு ஊழல்கள் குறைய வாய்ப்புண்டு.ஐந்தாவதாக, சத்துணவு மையங்களுக்கான உணவுப் பொருட்கள் சத்துணவு மையக் கட்டிடத்திலோ அல்லது அதனுடன் இணைந்த பள்ளியில் மட்டும்தான் வைக்கப்பட வேண்டும். திருட்டுப்பயம், மழைச்சாரல், ஈரமான தரை போன்ற காரணங்களைக் காட்டி அருகிலுள்ள வீடுகளில் இருப்பு வைக்கும் வழக்கம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். இது சத்துணவு மையப் பணியாளர்கள் தவறான முறையில் உணவுப் பொருட்களைச் சேகரித்து வைத்து வெளியில் எடுத்துச் செல்வதனைத் தடுக்க வகை செய்யும்.ஆறாவதாக, தெய்வத்திற்குச் சமமான ஏழைச் சிறார்களுக்குச் சேர வேண்டியதைத் தடுத்து உணவுப் பொருட்களைத் திருடும் அல்லது பகல் கொள்ளையடிக்கும் சத்துணவு மையப் பணியாளர்களையோ அவர்களுக்குத் துணைபோகும் அலுவலர்களையோ கண்டுபிடிக்க நேரிட்டால் அவர்களைக் கண்டித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும்.

ஏழாவதாக, 1980, 1990களில் சத்துணவு மையங்களின் செயற்பாடுகள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் காரணமாக மாவட்ட ஆட்சியாளர்களால் தனிக் கவனத்துடன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் துணை ஆட்சியர் அந்தஸ்துக்குக் குறையாத அலுவலர்கள் தணிக்கை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் மாதந்தோறும் குறைந்த பட்சம் 20 மையங்களையாவது தணிக்கை செய்து அறிக்கைகள் அனுப்ப வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கை எட்டத் தவறிய தணிக்கை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானதோடு அவர்களது விளக்கங்கள் கேட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட காலம் அது.

அவற்றோடு தணிக்கையின்போது குறைகள் காணப்பட்ட சத்துணவு மையங்கள், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையிலிருப்பின் அவற்றிற்கான காரணம், தண்டனை பெற்றவர்கள், வேலையிலிருந்து நீக்கப்பட்டோர் போன்ற விவரங்கள் அப்போது ஆய்வு செய்யப்பட்டன. அதற்குப் பிறகு சத்துணவு மையப் பணியாளர் சங்கங்கள் வளர்ந்து அவற்றிற்கு அரசியல் ஆதரவும் பெருகிவிட்டதால் சத்துணவு மையங்கள் கண்காணிப்பில் அன்றிருந்த நிலை இன்று இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

 இப்போதும் அன்றைய நிலை மீண்டும் தொடரப்பட்டு பெரிய அளவில் தவறு செய்யும் சத்துணவு மையப் பணியாளர்களை, துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு மேற்பட்ட அரசு தணிக்கை அலுவலர்கள் தணிக்கையின்போது குறைகள் கண்டு பிடிக்கப்பட்டவுடனேயே விளக்கம் ஏதும் கோராமல் தயவு தாட்சண்யமின்றி பணியிலிருந்து விடுவிக்கலாம் என்று அரசு முடிவெடுத்து அரசு ஆணை பிறப்பிக்குமேயானால் சத்துணவு மையச் செயற்பாடுகளில் ஊழல்கள் குறைய வாய்ப்புண்டு.

 அரசியல் பிரமுகர்கள் அல்லது சங்க அமைப்புகள் தலையிடவும் போதிய கால அவகாசம் இருக்காது. இவ்வாறான கேசுகளில் தணிக்கை அலுவலர் தமது விரிவான அறிக்கையை உடனே மாவட்ட ஆட்சியர் பெயருக்கு அனுப்பிவிட்டு நாளேடுகளுக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டால் தவறு செய்வோரும் அச்சத்தின் காரணமாகத் திருந்த வாய்ப்புண்டு.மேற்குறிப்பிட்ட ஏழு கருத்துக்களும் மக்கள் விழிப்புணர்வு பெறும் பொருட்டும் சத்துணவு மையங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவும் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றின் செயலாக்கம் சத்துணவு மைய அமைப்பாளர்கள், தணிக்கை அலுவலர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்தம் நிலைப்பாட்டைப் பொறுத்துதான் அமையும்.

அழக் கொண்ட எல்லாம் அழப்போம்
இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை.
(வினைத் தூய்மை குறள்)

மு. சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு).
நன்றி- குடிமக்கள் முரசு

வெள்ளி, 3 டிசம்பர், 2010

வேளாண்மை துறைவாரியான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட

வேளாண்மை துறைவாரியான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட 2010 - 11 ஆம் ஆண்டிக்கு காலவரையறைக்கு உட்பட்ட செயல் திட்டம் தயாரித்து பயனாளிகளுக்கு நேரடியாக திட்டப்பயன் சென்றடைதல் குறித்து அரசாணை (டி) எண். 234 1.12.1020 அன்று வேளாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


வேளாண் துறையில் 2010-11 ஆம் ஆண்டில், மாநிலத் திட்டங்கள், மத்திய மாநில சார்புத் திட்டங்கள் மற்று மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படும் திட்டங்கள், ரூ.1975.93 கோடி நிதி ஒதுக்கீட்டில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக, வேளாண் பொறியியல், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு ஆகிய துறைகள் மற்றும் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழக மூலமாக செயல்படுத்தப்பட்டு வருன்றன.

2) வேளாண் துறையில் பணியாற்றி வரும் விரிவாக்கப் பணியாளர்களை ஊக்கப்படுத்து வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்று சிறப்பத்த வேளாண் கருத்தரங்க மற்றும் அலுவலர்கள் மாநாடு, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 24.11.2010 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. வேளாண் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், உற்பத்தியினை மேலு அதிகரிக்கு வகையிலும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாநாட்டின்போது நடைபெற்ற கருத்தரங்கில், பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த வல்லுநர்கள், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான புதிய நவீன தொழில்நுட்பங்களை வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

3) தற்போது, பயிர் சாகுபடிக்கு சாதகமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்துள்ளதன் காரணமாக, வேளாண் பயிர்களின் சாகுபடி சென்ற ஆண்டினைக் காட்டிலு அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலு, தற்சமய நீர்நிலைகளில் உள்ள இருப்பு நிலவரத்தின்படியு, சாதகமான பருவ நிலை காரணமாகவும் மேலு கூடுதலான பரப்பில் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

4) எனவே, சாதகமான இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் அறிவுரைகளை, அதே வேகத்தில், சிறிதும் பிறழாமல், களப்பணியாளர்கள் மூலம் விவசாயிகளைச் சென்றடைய செயல் திட்ட" ஒன்று வகுத்து அதன் மூல திட்டப்பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாக காலத்தே சென்றடைய வேண்டும் என்று அரசு கருதுறது.

5) அவ்வாறே, வேளாண் துறையின் அனைத்து துறைத் தலைவர்களும் அனைத்து திட்டப் பணிகளையும் உரிய காலவரையறையுடன், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதற்கான செயல் திட்ட குறித்து ஆணை வெளியிடப்படுறது:-

* அனைத்துத் திட்டங்கள் வாரியான, இன வாரியான, மானியங்களுக்கு ஏற்ப, பயனாளிகளை தெரிவு செய்து, தேவைப்பட்டியல் ஒன்று கிராம வாரியாக தயாரிக்கப்பட வேண்டும். இந்த பயனாளிகளுக்கு உரிய அடையாள அட்டைகள் 15.12.2010 க்குள் வழங்கப்பட வேண்டும். இந்த அடையாள அட்டையினை பூர்த்தி செய்யும்போது, வருவாய்த்துறை அலுவலர்களின் துணையுடன், நில அளவை எண், நில உரிமையாளர் மற்றும் இருப்பட முகவரி போன்றவை தவறுதலின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

* பல்வேறு திட்டங்களின்கீழ் இனவாரியாக தேவைப்படும் இடுபொருட்களான தரமான விதைகள், உயிர் உரங்கள், இரசாயன உரங்கள், நுண்ணூட்டக் கலவை உரங்கள், பயிர் பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் பண்ணைக் கருவிகள், சொட்டுநீர் மற்று தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் போன்றவற்றை காலத்தே கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வெகு அருகாமையில் கிடைக்கும் வகையில் உரிய மையத்தில் இருப்பு வைத்திட வேண்டும்.

* இடுபொருட்களை வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேளாண் ஆலோசனை மையங்கள் (அக்ரி க்ளினிக்), அரசு விதைப் பண்ணைகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் இதர அரசு மற்றும் கூட்டுறவு அலுவலகங்கள் போன்ற மையங்களின் மூலமாக வழங்ட வேண்டும். மேலும், நடமாடும் இடுபொருள் வழங்கு மையங்களில் இருப்பு வைத்து இவ்விடுபொருட்களை வழங்கலாம். இவ்விடுபொருட்கள் உரிய அலுவலர்களின் முன் அனுமதி பெற்று இருப்பு வைத்து விநியோக்கப்பட வேண்டும். இப்பணிகள், 2011, ஜனவரி 15- தேதிக்குள் முடிக்குமாறு திட்டமிட்டு செயலாற்றிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

* இவ்விடுபொருட்கள் விநியோகத்திற்கான நாளை முன்கூட்டியே ஊடகங்கள், பத்திரிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், தண்டோரா போன்றவைகள் மூலம் விவசாயிகளுக்குத் தெரிவித்திட வேண்டும்.

* கிராமவாரியான இடுபொருள் வழங்கும் பணி பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி, சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல், குறிப்பட்ட நாளில், குறிப்பட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.

* இவ்விடுபொருள் வழங்கும் முகாம்களை துவக்குபோது மாவட்ட ஆட்சியர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்று அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் பயனாளிகளின் தெரிவு பட்டியலின்படி, திட்டவாரியான இடுபொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

* கிராம விழிப்புணர்வு முகாம் கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் அனைத்து திட்டங்களின் இனவாரியான இலக்குகளின்படி, பயனாளிகளுக்கு அரசின் இடுபொருட்கள் மற்று திட்ட பயன்கள் 15.2.2011க்குள் சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் செயலாற்ற வேண்டு.

* திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக எவ்விதக் குறைபாடும் இன்றி தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடைய வேண்டு.

* மேற்கண்டவாறு திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் பணிகளை மேற்பார்வையிட, ஒவ்வொரு துறையிலும் உயர் அலுவலர்களை நியமன செய்து, பயனாளிகளுக்கு காலத்தே அரசின் பயன்கள் சென்றடைவது கண்காணிக்கப்பட வேண்டும். இந்த கண்காணிப்பை, வட்டார அலுவலர் 100 சத அளவிலு, மாவட்ட அலுவலர்கள் 25 சத அளவிலு, மாநில அலுவலர் 10 சத அளவிலு எவ்வித முன்னறிவிப்பன்றி ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டு.

* தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் அவர்களுக்கு திட்ட வாரியாக வழங்கப்பட்ட இடுபொருட்கள் மற்றும் இதர பொருட்கள் குறித்த வேளாண்மை மற்றும் அனைத்து சகோதரத் துறைகளின் அனைத்து விவரங்களை வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநரும், மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநரும் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வார இறுதியிலும் பணி முன்னேற்றம் குறித்த அறிக்கை சபந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் (இதற்கான படிவம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது). இதனை துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பார்வைக்கு வைக்க கடமைபட்டவர்கள் ஆவர்.

6) மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திட்டப் பயன்கள் முழுமையாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சென்றடையுமாறு துறைத் தலைவர்கள் செயலாற்றிட வேண்டு என்று அரசு ஆணையிடுறது. மேலு, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வேளாண் துறையின் சகோதரத் துறைகளின் பணியாளர்கள் ஒருங்ணைந்து செயல்பட வேண்டு என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது  .


மேற்கண்ட இந்த அரசு ஆணை(டி) எண். 234 , கீழ்கண்ட அரசு அலுவலர்களுக்கு அனுப்பட்டு உள்ளது


வேளாண்மை ஆணையர், சென்னை - 5 தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர், சென்னை - 5

வேளாண்மை விற்பனை மற்றும் வேளான் வணிகத்துறை ஆணையர், சென்னை - 32
தலைமை பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, சென்னை - 35 அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ( சென்னை நீங்கலாக )

நகல்
அரசு முதன்மைச் செயலாளர், வருவாய்த் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9

புதன், 10 நவம்பர், 2010

இன்றைய பள்ளிக் கல்வி முறையும் செயல்வழிக்கற்றலின் தேவையும்

 பஞ்சாயத்து அமைப்புகளிடம் கல்வி


1981க்கு முன்புவரை தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் தான் இருந்து வந்தது. 1981க்குப் பின் கல்வித்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் ஒரே ஊரில் குடியிருந்தால்தான் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டுவிட்டது. தொலை தூரங்களிலிருந்து ஆசிரியர்கள் நியமனம் செய்வதால் வரவும் போகவுமான பயண நேரத்தைக் கணக்கிட்டு மணியைப் பார்த்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது.

தனியார் கல்வி நிறுவனங்கள்:

இத்தகைய நிலையில்தான் அரசின் புதிய பொருளாதார தனியார் மயக்கொள்கைகள் நாட்டில் புகுந்து விட்டதாலும் தொடக்கக் கல்வித்துறையால் தரமான, சிறப்பான தேவையான கல்வியை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தோன்றிவிட்டன.

1992 73வது சட்டத் திருத்தம் தமிழகத்தில் நிறைவேறவில்லை

1992ம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள் நிர்வாகம் உள்ளூர் பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. பள்ளிகளைக் கண்காணிப்பதற்கு தற்போது உள்ளாட்சிகளுக்கு எந்த அதிகாரமும் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் வழங்கப்படாமல் இருக்கிறது.

முழுமையான பள்ளிச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கும் கேரள மாநிலம் தனது பஞ்சாயத்து சட்டத்தில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உள்ளூர் ஆரம்பப் பள்ளிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும், பள்ளி முன்பருவக் கல்வி, சத்துணவு, பள்ளிக் கட்டடங்கள் பராமரித்தல் போன்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தொடக்கப்பள்ளிகளைப் பராமரிப்பதும், 14 வயது வரை குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி ஒன்றியங்கள் மேற்கொள்ள சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் பள்ளிச் சேர்க்கை 100%, 300 பேர் மக்கள் தொகை குடியிருப்பிற்கு 1கி.மீ. தூரத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிகள் உள்ளதாகவும் அரசு கூறுகிறது.

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பினபடி தமிழக மக்கள் தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 73% பேர் இதில் கையெழுத்து போட மட்டும் தெரிந்தவரும் அடக்கம். மீதி 27% மக்களுக்குத் கையெழுத்தும் கூட போடத் தெரியாது என்பதுதான் நிலை.

1994 தமிழ்நாடு கட்டாய தொடக்கக் கல்வி சட்டம்

இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கும் உச்சநீதிமன்றம் உன்னிகிருஷ்ணன் மற்றும் மோகன்கிரி வழக்குளில் அளித்த தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது. இது கட்டாயக் கல்வியை 5ம் வகுப்புடன் சுருக்கிவிட்டது. 2002

கல்வி அடிப்படை உரிமை 86வது திருத்தம்

 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை அரசு நிர்ணயித்த வண்ணம் அளிப்பது அரசின் கடமையெனவும் 6 வயதுக்கு முன் உள்ள முன்பருவக் கல்வி அரசின் நெறிக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவு 21 திருத்தப்பட்டு 21ஏ ன் மூலம் அடிப்படை உரிமையாக கல்வி (ஆரம்பக் கல்வி) அறிவிக்கப்பட்டது.

21ஏ ஐ செயல்படுத்த 2003 2005 ம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி மசோதா

21ஏஐ அடிப்படை உரிமையான ஆரம்பக்கல்வியை செயல்படுத்த 2003ம் ஆண்டு மத்திய அரசால் ஒரு வரைவு மசோதா கொண்டுவரப்பட்டு அதில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பலரின் கருத்துக்களைப் பெற்று மாற்றங்களுடன் 2005ம் ஆண்டு திருத்தி வரைவு செய்யப்பட்டு 2008ம் ஆண்டு பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயல்வழிக்கற்றல்

இவ்வளவு வரலாறுகளைக் கொண்ட ஆரம்பக்கல்வி தமிழகத்தில் இன்றும் பரவலாக அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லை. அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது அரிதாய் உள்ளது. பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால் இடையில் நின்று விடுகிறார்கள். அப்படியானால், குழந்தைகளை ஈர்க்கும் பள்ளிகளும் அவர்களைக் கவரும் கற்பித்தல் முறைகளும் அவசியம் வேண்டுமல்லவா? இதற்கிடையில் குழந்தையின் கற்றல்திறன் மிகவும் பின்னடைந்துள்ள ஒரு புள்ளி விபரத்தைப் பார்ப்போம்.

 தமிழகத்தில் 10 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு வெளியே உள்ளனர். 5ம் வகுப்பில் 34.8% குழந்தைகளால் மட்டுமே எளிமையான கதைகளைப் படிக்க முடிகிறது. 16.6% குழந்தைகளால் மட்டுமே ஆங்கிலத்தில் எளிதான வாக்கியங்களைப் படிக்க முடிகிறது. 19.5%குழந்தைகளால் மட்டுமே வகுத்தல் கணக்குகளைப் போட முடிகிறது. (தமிழகக் கல்வி நிலையும் செயல்வழிக் கற்றலும் மலரகம்) இது எதைக் காட்டுகிறது?

1. தமிழகத்தில் ஆரம்பக்கல்வியில் குழந்தைகளின் அடிப்படைத்திறன் வளர்ப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

2. பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்க, பள்ளியின் பாட முறைகளும், கற்றல் முறைகளும், கற்றுக் கொண்டோரின் அணுகு முறைகளும் மாற வேண்டியுள்ளது.

3.குழந்தை திறம்படக் கல்வி கற்பதற்கு குழந்தையை மையமாகக் கொண்ட கற்றல் திறன்கள் அவசியமாக உள்ளது. இரு காதுகளைக் கொண்ட குழந்தைகளுக்கு நாம் செல்வதெல்லாம் ஏறிவிடும் என்ற மனப்போக்கைக் கைவிட்டு குழந்தைகளைப் படைப்பாற்றல் கொண்டவர்களாக, அவர்களின் எண்ணங்களைக் குழுவாக, தனியாக வெளிப்படுத்த வந்துள்ள ஒரு முறைதான் செயல்வழிக் கற்றல் (பு.ய.ஸி.) முறை. இதன் மூலம் (பு.ய.ஸி.) குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்படுகிறது. குழந்தைகள் முகமலர்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். அனைத்துக் குழந்தைகளும் குறிப்பாக, கிராமக் குழந்தைகள் இயல்பாக வளர்கிறார்கள். சாதாரண தாழ்த்தப்பட்ட/ஆதிவாசி/பிற்படுத்தப்பட்ட குடும்பத்தின் குழந்தைகள் சாதாரணமாக சூழலில் வளர்வதால் எதையும் சுற்றிப்பார்க்க, அறிய, ஆராய முயல்வார்கள். இந்த உந்துதல் பள்ளிக்குப் போனவுடன் மாற்றப்படுகிறது. அடக்கம், ஒடுக்கம், அமைதி, கவனி என்று எல்லாமே மேலிருந்து திணிக்கப்படும்போது இத்தனை நாளும் இயல்பாகவே இருந்த ஆர்வம் (அறிய, ஆராய) முடக்கப்படுகிறது. மீ ஏற்றத்தாழ்வு, பயஉணர்ச்சி நீங்கிட செயல்வழிக் கற்றல் கூட்டுச் செயல்பாட்டு கற்கும்முறை வழிவகுக்கிறது.

அறியும் திறன், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளது. இது சிறு வயதிலேயே உணரப்படுகிறது. ஆசிரியர்களின் பொறுமையான செயல்பாடு, விடா முயற்சி அவரவர் தகுதி நிலைக்கேற்ப கற்றுக் கொள்ளலாமென்று குழந்தைகள் ஏற்றுக்கொள்கிற வாய்ப்பு இதில் உள்ளது.

ஏபிஎல்ஐ நடத்தும் முறை, அதாவது பாடங்களை அர்த்தமுள்ள அலகுகளாகப் பிரிப்பது, கோர்வையான மைல்கற்கள், படிக்கட்டுகள், ஒவ்வொரு மைல்கல்லை அடையும்போதும் ஒரு இனிமை ஆகியவை மூளையைப் பயன்படுத்த சிந்திக்க ஒரு சிறந்த பயிற்சியாக உள்ளன.

குழுவாகக் கற்றுக்கொள்வது, சக மாணவர்கள் கற்க உதவுவது, இதில் ஆசிரியர்களும் இணைந்து உற்சாகப்படுத்தும்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது ஒருவர் ஒருவருக்கு உதவுவது மனித இயல்பு. அதுவே வெற்றியின் பாதை. இதனால் சுயநலம் குறைய வாய்ப்புள்ளது.

செயல்வழிக்கற்றலில் வருகைப் பதிவை குழந்தைகளே செய்வது, டிரேய்ஸ் கூடைகளை தானே கொண்டு வருவது முடிந்தவுடன் தானே கொண்டு போய் வைப்பது போன்றவை பொறுப்புணர்ச்சியைத் திடப்படுத்துகிறது.

 குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் சாக்பீஸ், கரும்பலகை, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்தக் கொடுக்கும்போது நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் உற்று நோக்கும் திறன்களையும் வளர்க்கிறது.

படிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் செய்வது, குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு. ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில்லாமல் விளையாட்டுப் பந்தயங்களில் திறமையிருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு நடிப்பு, நடனம் போன்றவற்றில் திறமையிருக்கும். இவையாவற்றையும் சிறுவயதிலிருந்தே வளர்க்க இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. (இசை, கலை, கவிதை போன்றவை சமூகத்தைப் பண்படுத்தும் கருவிகள் என்பது இன்னும் நம்மில் பலபேருக்குப் புரியவில்லை,)

ஆசிரியர்கள் குழுவான குழந்தைகளோடு இணைந்து செயல்படுவதால் பெருந்தன்மையோடு அக்கறையுடன் குழந்தைகளுடன் இணைந்து செயல்படுவதால் குழந்தைகளுக்கு அனைவரும் சமம் என்பது மனதில் புரியும். இந்தப் போக்கு குழந்தைகள் வளர வளர தங்களுக்கு மேல் படித்தவர்களுடன் பழக நேரிடும்போது நாம் தள்ளியே இருக்க வேண்டும் என்ற குணம் மறையும். ஆசிரியர்கள் குழந்தைத் தோழனாக குழந்தைகளுடன் கலந்து இருப்பது போன்றே கல்வித்துறை அதிகாரிகளும் (றீறீபு, புசிநு) இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இந்த கல்வி முறையைப் பார்த்தவுடன் நமக்கும் ஏற்படுகிறது.

இவையல்லாமல் பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள் சந்திப்பு அடிக்கடி நடக்க வேண்டும். அப்போதுதான் சமூக உணர்வு வீட்டிலும் தொடர வாய்ப்பு ஏற்படும். இப்படிப்பட்ட கருத்துக்களை கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வெளிப்படுத்தும் கருத்துக்களில் நியாயமானவை என்றே கருதுகிறோம். அத்துடன் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளான ஆசிரியர் மாணவர் விகிதம், போதுமான கல்வி உபகரணங்கள், முழுமையான பயிற்சி, காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை நிரப்புதல் போன்றவைகளில் அரசு முழுக்கவனம் செலுத்தினால் இந்த முறை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒருசாரார் கோருவது நியாயமில்லை என்பது நமக்குப் புலப்பட்டுவிடும்.

இம்முறையில் பிரம்படி என்பதோ, தண்டனைகள் என்பதோ, பிரம்புடன் கூடிய ஆசிரியர் என்பவரோ இல்லாமல் குழந்தைகள் அச்சமில்லாமல் தோழமையுடன் தங்குவதற்கு (இடைவிலகலின்றி) மிக உதவியாக இருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

 எனவே இன்று உருவாகியுள்ள பள்ளிகளில் தண்டனைகள், வன்முறைகளைத் தடுக்கும் பிரச்சாரம் இத்தகைய ஏபிஎல் முறையைத் தமிழகத்தின் தனியார் அரசு அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தி நல்ல சூழல் உருவாகும்வரை நமது பிரச்சாரம் செய்யப்படுவதற்கான தேவை இருக்கிறது. 

நன்றி - குடிமக்கள் முரசு

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தமிழகத்தில் விவசாயத்தின் இன்றய நிலை

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே . எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு . இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அவர்களின் பாரம்பரிய தொழிலைச் சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் . அதற்காக மற்ற துறைகள அனைத்தையும் ஒதுக்கி விடக்கூடாது, அது மிகவும் தவறு . ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.

விவசாயத்தின் உற்பத்தி திறன் குறைந்துகொண்டு வருகிறது . உற்பத்தி திறன் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் உள்ளது . விவசாயிகள் பயன்படுத்துகின்ற செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை முற்றிலுமாக மாற்றி விட்டன . இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கும் முறை விவசாயிகளிடம் இல்லை . மற்றொன்று அரசின் அலட்சியம்,விவசாய வளர்ச்சிக்கு உண்மையான, தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டு விட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன . சமீபத்தில் கூட 72000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள் . நல்ல விஷயம்தான் . அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள் . கடன் தள்ளுபடி மற்றும் வட்டி தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்


வேளாண் துறை ஆயிரம் விளக்கங்கள் கூறலாம், பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடலாம் . ஊருக்கு ஊர் வேளாண்துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன என்று கணக்கு காட்டலாம் . மாதிரிப் பண்ணைகள் , இலவச மின்சாரம் மற்றும் விதைகள் , செயல் பயிற்சிகள் எல்லாம் செயல்படுகிறது என்று கூறலாம் . இத்தனை இருந்தும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தீர்வு காண எந்த அரசும் முன்வரவில்லை .

அடிப்படை பிரச்சனை விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது என்பதல்ல . விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்னை . அப்படியே ஆட்கள் கிடைத்தால் , அங்கே போதிய தண்ணீர் வசதி கிடையாது . தடையில்லாத மின்சாரம் கிடையாது . இதெல்லாம் இருந்து பயிரிட்டு, உரமிட்டு, அறுவடைசெய்தால் விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று ஒரு வாசகம் உண்டு. 

விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படாதற்கு காரணம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றம் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டதுதான் எடுத்துக்காட்டாக 1970 ஆம் ஆண்டில் ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய் . அப்போது ஒரு மூட்டை நெல் 35 முதல் 40 ரூபாய் வரை விற்றது கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்சம் ரூபாய். ஆனால் ஒரு மூட்டை நெல்லின் விலை 500 முதல் 600 ரூபாய்தான் .கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று டிராக்டர் வாங்க முடியும், அதாவது நெல்லின் பண்டமாற்று சக்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது 1970 ல் ஒரு மாட்டின் விலை ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய் .அன்று தினக்கூலி வெறும் 2.50 இன்று நூறு ரூபாய். அன்று மண்வெட்டியின் விலை இரண்டு ரூபாய்.இன்று ஒரு மண்வெட்டியின் விலை 110 ரூபாய். அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டை விற்றால் தான் ஒரு சவரன் வாங்கமுடியும். 1975 முதல் 2008 வரை தொழிற்சாலைப் பொருட்களின் விலை 40 முதல் 45 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

சட்டமன்ற.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளமும் பன் மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த 60 ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஆறு ஊதிய கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களை பல மடங்கு உயர்த்திக்கொண்டார்கள்.  ஆனால் விவசாய பொருட்களுக்கு 8முதல் 10 மடங்கு வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது

 நம் நாட்டில் விவசாயப் பொருள் சந்தைக்கு வரும் போது விலை மிகவும் குறைந்து விடுகிறது, அறுவடை முடிந்ததும உடனேயே காசாக்கி விடுவோம் என்று ஒவ்வோரு விவசாயியும் நினைப்பதால் தங்கள் விளைபொருளை அனைவரும் விற்க ஆசைப்படுகின்றனர், இவர்களின் நிலைமையை பயன் படுத்தி வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கே அப்பொருளை கேட்கின்றனர், செலவழித்ததை விட குறைவாக கிடைத்தாலும் கையில் காசு வருகிறது என்று விவசாயிகள் விற்று விடுகின்றனர். சில காலம் கழிந்து எல்லாவற்றையும் வாங்கிப் பதுக்கிக் கொண்ட வியாபாரிகள் விலையை உயர்த்தி வெளிசந்தையில் விற்க ஆரம்பிப்பார்கள். வாங்குபவர்களுக்கு அந்த விலையில் வாங்கி கொள்வதைத் தவிர வேறு வழியில்லை . வியாபாரிகளுக்கு மட்டுமே அதிக இலாபம் கிடைக்கிறதே தவிர, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவிதமான பயனும் இல்லை. இதனால் விவசாயிகள் கடனாளியாகி விடுகின்றனர், ஏழை மக்களுக்கும் சரியான விலையில் சாப்பாடு கிடைப்பது இல்லை . சந்தைப் பொருளாதாரம் என்கிற சாக்கில் இடைத்தரகர்கள் கொழிக்கிறார்களே தவிர விவசாயிக்கு மிஞ்சுவதென்னவே வறுமையும் , கடனும்தான் . வெல்லம் திங்குறவன் ஒருவன் விரல் சூப்புறவன் இன்னொருவன் இந்த பழமொழி நம் விவசாயிகளுக்கு மிக பொருத்தமானது, விளைவிப்பவன் ஒருவன் அதனுடைய விலையை நிர்ணயம் செய்பவன் இன்னொருவன், லாபம் பெறுபவன் மற்றொருவன் . விவசாயநிலத்தில் விளையும் பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும் .

 நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது, 1939 ஆம் ஆண்டு அமெரிக்கா அரசு நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டுவந்தது .1.விவசாயிகளுக்கு நிவாரணச் சங்கம். 2, நில நிர்வாகச் சட்டம். 3.விலை நிர்ணைய சட்டம் . 4. விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் , இந்த சட்டங்களின் படி அனைத்து விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை உயர்ந்துள்ளது போல விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது , அந்த விலை பின்பு அதிகம் ஏறவும் இறங்கவும் முடியாத படி உற்பத்தியாளர் சந்தை வாரந்தோறும் அமைக்கப்பட்டது. இதனால் விவசாய பொருட்களின் விலை நிர்ணையம் செய்யப்பட்டது ஆனால் நம் நாட்டில் அவ்வாறு இல்லை . மானியங்கள் அதிகரித்தாலும் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  

 இந்தியாவின் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 16 சதவீகிதத்தில் இருந்து 11 சதவீகிதமாக குறைந்துள்ளது தற்போது நாட்டில் 40 சதவீகிதத்தினர் மட்டுமே விவசாயம் செய்ய விரும்புகின்றனர். அவர்களின் சந்ததியினர் வேறு தொழிலுக்கு செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது . இந்த நிலை மாறுவதற்கு, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதற்கு அரசு வழிசெய்தாக வேண்டும் . மத்திய அரசின் சம்பளக் கமிஷன் போல , திட்டக் கமிஷன்போல வேளாண்மைக்கு ஒரு கமிஷன் ஏற்படுத்தி விவசாயிகளின் நலன் பேணப்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் உணவு உற்பத்தி தன்னிறைவு என்பது உறுதி செய்யப்படும்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

நமது நாட்டு வேளன்மையின் பரிதாப நிலையும் நாம் செய்ய வேண்டியதும்



இருபது நூற்றாண்டை கடந்து இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் கலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் முடியும் தருவாயில் உள்ளோம். உலக வரலாற்றில் விஞ்ஞான வளர்சியின் உச்சகட்டமாக இருபதாம் நூற்றாண்டு எண்ணப்பட்டலும் கூட இதே விஞ்ஞான வளர்சி உயிர்களை அழிக்கும் வளர்சியாகவும் செயல்பட்டுவந்துள்ளது. மிகப்பெரிய சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்கி உள்ளது நிலத்தையும், குடிக்கின்ற நீரையும், சுவாசிக்கின்ற காற்றையும் பாழடித்துள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

கடந்த நூற்றாண்டில் இந்திய வேளண்மைக்கு ஏற்பட்ட சோதனை மிகப் பெரிய சோதனை. வளரும் நாடுகள் யாவும் அடிமை நாடுகளாக இருந்து இராண்டாம் உலகபோருக்கு பின்னர் படிபடியாக விடுதலை பெற்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாய் இருந்த இந்தியாவின் விவாசாயம் சீரழிந்தது. இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு நீர்பாசனதிட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதால் உருவானதுதான் மேட்டூர் அணை , கரிகாலன் கட்டிய கல்லணை பழுது பார்க்கப்பட்டது,கல் அணை கால்வாய் வெட்டப்பட்டது (புது ஆறு), இவ்வாறே பெரியாறு அணைத்திட்டம், பாலாற்று கால்வாய் என்று பலவற்றைக் கூறலாம்.


இதன் முக்கிய நோக்கம் நீர்வரியும் நிலவரியுமாகும். இந்த வரி விதிப்பானது நமது விவசாயத்தை பெருமளவு பாதித்தது என்று கூறலாம் ஏனெனில் பிரிட்டிஷ் அரசுக்கு வரிசெலுத்த முடியாமல் பெரும் நிலங்களில் விவசாயம் செய்த ஜமின் அமைப்புகள் விவசாயம் செய்வதை குறைத்துக் கொண்டன. இதனால் பாதிக்கும் மேற்பட்ட விவசாயநிலங்கள் தரிசாக போடப்பட்டது.இதே போன்று அனேக சிறு விவசாயிகளும் நில வரியும், நீர் வரியும் செலுத்த முடியாமல் தங்கள் தேவைக்கும் மட்டும் விவசாயம் செய்ததால் மேலும் அதிக விவசாய நிலங்கள் தரிசாக மாறிப்போனது. இதனால் ஏரி, குளங்கள் தூர்ந்து போயின இத்தகைய காரணங்களினால் கிரமங்களில் பொதுப்பணிகள் புறக்கணிக்கப்பட்ன.


விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 60 ஆண்டுகளில் நமது அரசாங்கம் தொலைநோக்கு பார்வையில்லாமல் கடைபிடித்து வந்த விவசாயக் கொள்கைகள் நமது பாரம்பரிய விவசாய தொழிநுட்பங்களை அதன் சுவடு தெரியாதபடி அழித்தது மட்டும் இல்லாமல் மேலை நாட்டு விவசாய உத்திகளை நம் விவசாயிகள் மேல் திணித்தார்கள். இதன் பலன் என்ன என்று பார்த்தால் இயற்க்கை வேளாண்மையின் பயிர் சுழற்சி முறையின் தன்மை மாறி நூற்றுகனக்கான ஏக்கர்ளில் ஒரே வகையான பணப்பயிர்களை விளைவிக்கும் புதிய பழக்கம் தோன்றியது; பயறு வகைகளை பயிறுடும் பழக்கத்தில் இருந்து நம் விவசாயிகள் விலகினர்,இந்த பயறு வகைகள் காற்று மான்டலத்தில் உள்ள நைட்டரஜன் சத்தை மண்ணில் பொருத்தும் தன்மை கொண்டவை, பயறு வகைகளை விளைவிக்காததால் மண்ணில் நைட்ரஜன் சத்து குறையத் தொடங்கியது. நமது நட்டின் உள்ளுர் உயிர்ச்சூழல் அமைப்புக்கு ஒத்துவராத தாவரவகைகள் நம் நாட்டில் அறிமுக படுத்தினர்.இதனால் முன்பு இல்லாத நோய்களும் பூச்சிகளும் கூடவே சேர்ந்து அறிமுகமாயின. பூச்சிகளையும்,நோய்களையும் சமாளிக்க செயற்கை உரங்கங்களையும், பூச்சிமருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கினார்கள். நமது மண்ணிற்கு வளம் சேர்த்த பண்டங்களுள் முக்கியமானது எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்குகளும் ஒன்று. எண்ணெய் வித்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் மறைமுகமாக நம் மண்ணிண் வளமும் இங்கிலாந்து போன்ற அயல் நாடுகளுக்கு கடத்தப்பட்டது.

தொழிற்ச்சலைகளின் வரவால் நாம் பாரம்பரிய இந்திய செக்குகள் மறைய தொடங்கின. பாரம்பரிய செக்குகளின் மூலம் எடுக்கப்படும் பிண்ணாக்கு மிகவும் பொடி பொடியாக இருப்பதால் மண் வளத்தை அவை உடனடியாக உயர்த்தின.ஆனால் இயந்திரங்களின் மூலம் எண்ணெய் பிழிந்து எடுக்கப்படும் பிண்ணாக்குகிளில் அத்தகைய தன்மை இல்லை.

நவினமயமாக்கப்ட்ட விவசாயத்தால் நாம் நாட்டின் விலை நிலங்களின் தன்மை மாறியது மட்டும் இல்லாமல் பாரம்பரிய விதைகளையும் தானியங்களையும் அழித்துவிட்டார்கள். சம்பா கிச்சடி, வையக் குண்டான், குதிரைவால், தங்கச்சம்பா, ஆனைக்கொம்பன், செருகமணி, சொர்ணவாரி, டொப்பி, அறுபதாங்குறுவை, வெள்ளைக்கார்,கட்டைச்சாம்பா, பிசானம் மடுமுழுங்கி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, வாடன் சம்பா , குடவாழை, குறுவைக் களையான், குழியடுச்சான், கொட்டாரஞ்சம்பா, இலுப்பைப்பூ சம்பா இது போன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட விதை நெல்வகைகள் நம் விவசாயிகளால் பருவ நிலைக்கு ஏற்றவறு பயிர் செய்யப்பட்டது. அனால் இன்று பத்து வீரிய நெல்ரகங்கல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.


இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியை தாண்டி பெறுகிக் கொண்டே போகிறது. அனைவருக்கும்உணவு அளிக்கவேண்டிய விவசாய துறை நாளுக்குநாள் குறுகிக் கொண்டே போகிறது. முன்பு பெரிய முதலீடு இல்லாமல் விவசாயம் செய்தார்கள் நம் முன்னோர்கள். இன்று பசுமைப் புரட்சியின் தாக்கத்தால் நம் விவசாயிகள் பெரிய அளவு செலவு செய்து செய்ய வேணடிய தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. இதனால் இலாபம் இல்லாமல் செய்யும் தொழிலாகிவிட்ட விவசாயத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் விவசாயிகள் மாற்று தொழிலை நாடியுள்ளனர்.இதானல் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் வாங்கும் சக்தியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.


விவசாயம் என்பது போக்கிடம் இல்லாத முதியவர்களின் தொழிலாக விவசாயம் மாறிவிட்டது. இந்த நிலையில் இருந்து மீண்டும் நாம் நமது உழவர்களின் பொது அறிவை பளன்படுத்தி பாரம்பரிய வேளான்முறைகளுக்கு திரும்ப வேண்டியது இன்றைய தேவை . இதை ஊக்குவிக்க நமது அரசு முன்வரும் என்று எதிர்பாப்போம்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தேர்தல் சீர்திருத்தங்கள்

இந்தியாவில் நாடாளுமன்றம் முதல் அனைத்து மாநில சட்டப் பேரவை வரையிலான அனைத்து அமைப்புகளுக்கும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்துதல் மற்றும் அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வழிகாட்டுதல், கண்காணித்தல், முறைப்படுத்ததல் போன்ற அதிகாரங்கள் தேர்தல் ஆணையம் எனப்படும் சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையரையும், மற்ற தேர்தல் ஆணையர்களையும் இந்தியாவின் குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாகவும், அரசு நிர்வாகத்தின் குறுக்கீடுகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகவும் திகழ்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் என்பது மட்டுமின்றி அரசியல் சட்டத்தின் 324(5) பிரிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நேரடியாக பதவி நீக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்குவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவோ, அதே போன்ற நடவடிக்கைகளின் மூலம் தான் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்க முடியும். அதேபோல் தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின்றி தேர்தல் ஆணையர்களை பதவி நீக்க முடியாது.

குமரப்பாவின் ஐவகைப் பொருளாதாரம்

டாக்டர் ஜே.சி குமரப்பா சிறையில் இருந்தபோது நூல் ஒன்று எழுதினார் அகற்கு ‘என்றுமுள்ள பொருளாதாரம்’ என்று பெயரிட்டார். அதற்கு அழிவற்ற பொருளாதாரம், நிலைத்தப் பொருளாதாரம் அல்லது காலத்தை வென்ற பொருளாதாரம் என்றும் அதற்கு பெயர் சூட்டலாம். இந்த நூல் சிறப்பாக என்னென்ன கூறியுள்ளது என்பதைப் பார்ப்போமா?

வாழ்வும் பொருளீட்டலும்
மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். வாழ்க்கையில் அமைதி இல்லையென்றால் நமது வாழ் நாள் எல்லாம் சீரழிய வேண்டி வரும். நாம் வாழ்வதற்கோ பொருளும், அருளும் வேண்டும். எப்படியாவது, ஏனோ தானோவென்று பொருளைச் சம்பாதிக்கலாமா? கூடவே கூடாது. இதற்கும் ஒரு நியதி உண்டு. பிறருக்குத் துன்பந் தராமல் அறவழியில் நாம் பொருள் ஈட்ட வேண்டும். நம்மிடத்தில் உள்ளவற்றைப் பிறருடன் பகிர்ந்து மகிழ வேண்டும். அப்போது நமது அண்டை அயலாரும் நம்முடன் தோழமை உணர்வுடன் பழகுவர். இத்தகைய அன்பு தான் நமக்கு அருளை அருளும். அருள் நிறைந்த பொருளாளர் தான் இம்மை மறுமைப் பயன்களை அனுபவிக்க வல்லவர். இக்கருத்தை வலியுறுத்த வந்த நமது குமரப்பா உலகில் இன்று நடைமுறையில் உள்ள பொருளாதார அமைப்புகளை ஐவகைப் படுத்துகிறார். அவற்றின் தராதரங்களை எளிய முறைகளில் அலசி ஆராய்கிறார். அதற்காக புலி, குரங்கு, குருவி, தேனீ, தாய் என்ற வரிசையில் பொருளாதாரக் கொள்கைகளை அவருக்கே உரிய பாணியில் விளக்குகிறார். இதோ அவை.

புலிப் பொருளாதாரம்

புலி ஒரு வன விலங்கு. அதைச் சுற்றி காட்டில் மான், ஆடு, மாடு, குதிரை போன்ற நூற்றுக் கணக்கான மிருகங்கள் ஓடி ஆடித் திரியும். புலிக்குப் பசி எடுத்தவுடன் உறுமும். சுற்றியுள்ள மிருகங்கள் திடுக்கிட்டு இங்குமங்கும் ஓட ஆரம்பிக்கும். புலி பாய்ந்து அவற்றில் ஒன்றைக் கழுத்தில் கவ்வி தன் குகைக்கு இழுத்துச் சென்று தன் குட்டிகளுடன் அதைக் கிழித்து உண்ணும். அது தன் உணவிற்காக எந்த வித உற்பத்தியும் செய்யவில்லை. மாறாக நினைத்தவுடன் ஓர் உயிரை அழித்து தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. இதைவிடப் பாவகரமான சுரண்டல் உலகில் இருக்க முடியுமா? இதைக் கொலைப் பொருளாதாரம் என்று தாராளமாய்க் கூறலாம் அல்லவா?

நடைமுறைச் சான்றுகள்

கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவ்வழியே போன ஒருவன் அச் சங்கிலியைக் கண்ணுறுகிறான். உடனே இன்றைய பவுன் விலை அவனுக்கு ஞாபகம் வருகிறது. இது 2 பவுன் இருக்கும் அதாவது இன்றைய விலைக்கு ரூ. 7000 ஆகும். இந்த எண்ணத்தால் கவரப்பட்ட அவன் அச்சிறுமியைத் தாஜா பண்ணி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டிச் செல்கிறான். அங்கு சங்கிலியைப் பறிக்க யத்தனிக்கிறான். சிறுமி அலற ஆரம்பிக்கிறாள். அவ்வளவுதான், அவன் அவளுடைய கழுத்தை நெறித்து, சங்கிலியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறான். இவன் செய்ததற்கும் புலி தன் இரையைப் பெற்றதற்கும் வித்தியாசம் உண்டோ? இன்றோ பணக்கார நாடுகள் சில இருக்கின்றன. இவை இயந்திரங்களைக் கொண்டு பெரிய அளவில் உற்பத்தியைப் பெருக்குகின்றன. அதனால் பொருள்கள் குவியத் தொடங்குகின்றன. அவற்றை எப்படியாவது விற்பதற்காக சிறிய நாடுகளை இவை பிடித்து விடுகின்றன. எதிர்த்தால் உலகப் போர் உண்டாகிறது. முழுக்க முழுக்க இம்சையை அடிப்படையாகக் கொண்ட இது புலி பொருளாதாரத்தைத் தவிர வேறு என்ன?

குரங்குப் பொருளாதாரம்

குரங்கு மரத்தில் வாழும் நமது மூதாதையர் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பழனி மலையில் குரங்குகள் அதிகம். ஒரு முருக பக்தர் தனது மனைவி மக்களுடன் அடிவாரத்தில் ஒரு கடையில் தேங்காய், பழம் போன்ற அபிஷேகச் சாமான்களை வாங்கிக் கொண்டு படிகளில் பயபக்தியுடன் ஏறி வருகிறார். திடீரென்று அவருக்கு முன் குதித்து அவர் கையிலிருந்து கூடையைப் பறித்துக் கொண்டு மர உச்சிக்குப் போய் விடுகிறார். இவரோ குய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறார். தனக்குரியதை எடுத்துக் கொண்டு கூடையைத் தள்ளி விடுகிறார் நம் மேதாவி. இச்செயலில் இருந்து நாம் புரிந்து கொள்வதென்ன? குரங்கு தன்னுடைய வயிற்றை நிரப்ப எந்த உற்பத்தி வேலையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக படி ஏறி வந்தவர் எதிர் பாராத வேளையில் தனக்கு வேண்டிய பொருளை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு போய்விட்டது. இந்தச் சுரண்டலில் கொலை நடக்கவில்லை. பறிமுதல் மட்டும் நடைபெற்றுள்து. ஆகவே இதை கொள்ளைப் பொருளாதாரம் என்று துணிந்து கூறி விடலாம். உதாரணங்கள்: சிறுமியின் சங்கிலியை எடுத்துக் கொள்ள நினைத்தவன் அவளைக் கொல்லாமல் விட்டு விட்டால் குரங்குப் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கின்றான். இங்கு இம்சை ஓரளவு குறைந்துள்ளது. அவ்வளவுதான். இன்று பெரிய நாடுகள் தங்களுடைய அபரிமிதமான பொருட்களை சிறிய நாடுகளின் மேல் திணிக்கின்றன. உதவி என்ற பெயரில் உதவாக்கரைப் பொருட்களையும் அனுப்பி எடுத்துக் கொள்ள வைக்கின்றன. வேறு வழியின்றி இந் நாடுகள் அவற்றை ஏற்று நட்டத்திற்குள் ஆகின்றன. இந்த இம்சை நமது பொருளாதாரத்தை மட்டும் சீர் குலைக்க வைக்கிறது. உயிர்கட்கு ஆபத்தில்லை. இதைப் போலவே கிராமங்களில் பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டிப் பிழைக்கிறதை நாம் அறிவோம். வீட்டுத் திருடர்களும், ஜேப்படித் திருடர்களும் இப்படித்தான் பிழைத்து வருகிறார்கள்.

குருவிப் பொருளாதாரம்

சிட்டுக் குருவி, மைனா, புறா, கிளி, போன்ற சிறிய பறவைகள் அதிகாலையில் விழித்து, கீச்கீச் சென்று தங்களுக்குள் பேசி விட்டு சூரிய வெளிச்சம் தெரிந்ததும் எங்கோ பறந்து செல்கின்றன. காடுகளிலும், வயல்களிலும் தங்களுடைய ஆகாரத்தைக் கூரிய அலகால் கொத்தி உண்கின்றன. கும்மிருட்டிற்கு முன் தங்களுடைய மரங்களில் மீண்டும் வந்தடைகின்றன. இவை தங்கள் சொந்த உழைப்பால் தங்களுக்குத் தேவையான ஆகாரத்தை தேடிப் பெறுகின்றன. மற்றவர்களைச் சுரண்டுவதில்லை. விவசாயிகள், இலாப நோக்கமில்லாத வியாபாரிகள், தங்கள் கைகளை நம்பி வாழும் கூலி வேலை செய்யும் பெரு மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். இதை தன் முயற்சிப் பொருளாதாரம் என்று கூறலாம் அல்லவா? ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளைத் தங்கள் உழைப்பால் பெற்றுக் கொண்டால் உலகில் சண்டை ஏது? சச்சரவு ஏது?

தேனீப் பொருளாதாரம்

தேனடையைச் சோதித்து பார்த்திருக்கிறீர்களா? அங்கு ஒரே ஒரு ராணி ஈ, அதைக் காப்பற்ற நூற்றுக் கணக்கான சோம்பறி ஈக்கள் எனப்படும் ஆண் ஈக்கள். ஆயிரக் கணக்கான வேலைக்கார ஈக்கள். அலிகளான வேலைக்கார ஈக்கள் ஒவ்வொன்றும் குழுவாகச் சேர்ந்து ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன. ஒரு குழு அடைக்கு காவல் புரிகிறது. ஈ, எறும்பு, பல்லி, ஓணான், கரடி போன்ற எதிரிகளை எதிர்த்து உயிரையும் கொடுக்கத் தயாரகிறது. மற்றொன்று தேனடைக்குள் வெப்பம் தாக்காது தடுக்க சதா விசிறிக் கொண்டிருக்கிறது. பல குழுக்கள் அதிகாலையில் கூட்டை விட்டுச் சென்று, பல மைல்கள் பறந்து போய், எண்ணற்ற பூக்களில் உட்கார்ந்து தேனை உறிஞ்சி, மகரந்தத் தூளைச் சேகரித்து வருகின்றன. சில கண்ணறைகளை மெழுகால் அறுபக்க வடிவில் அழகாய் அமைக்கின்றன. ராணி ஈக்கு தனி அறை, தனி உணவு என்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அடையில் உள்ள அத்தனை ஈக்களும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுவதால் தேன் வம்சம் பெருகுகிறது. தனக்காக மட்டும் உழைக்காமல், சமூகத்திற்காவும் தேனீக்கள் பாடுபடுகின்றன. ஆகவே இதைக் காட்டிலும் கூட்டுறவுப் பொருளாதாரம் உண்டோ? நமது நாட்டில் பஞ்சாயத்து, கிராமசபை, கூட்டுறவு என்ற முறைகளில் நம்மை நாமே உயர்த்திக் கொண்டது இதன் அடிப்படையில் அல்லவா? ஊர்களில் கிராமப் பொது நிதி என்று திரட்டி அதைப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தி வரும் பழக்கத்தை இத்துடன் ஒப்பு நோக்குக. சுருங்கக் கூறின் மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதை இத்திட்டம் நமக்கு வலியுறுத்துகிறது.

தாய்மைப் பொருளாதாரம்

 நமது தாய் ஓர் ஒப்பற்ற தியாகி. நம்மைப் பத்து மாதங்கள் சுமந்து சொல்லொணாப் பிரசவ வேதனையை அனுபவித்து நம்மைப் பெற்றெடுத்தாள். நாம் பால்குடி மறக்கும் வரை அவள் தான் விரும்பிய பொருளை நினைத்த நேரத்தில் உண்ண முடியாதவள். அதையும் விட்டுக் கொடுத்தாள். நமது பாலப் பருவம் முடியும் வரை நம்மைக் கண்ணே போல் பேணிக் காத்தாள். நம்முடைய இன்ப துன்பத்தில் எல்லாம் பங்கு கொண்டாள். பிரதிப் பலனை எதிர் பாராது தன் கடமையை இறுதிவரை ஆற்றிக் கொண்டே உயிர் விடுகிறாள். தனக்கென வாழாமல், குடும்ப நலத்திற்கு தன் இன்னுயிரை அளிக்கிறாள். இத்தகைய அன்பு, கருணை, தியாகம், கடமை உணர்வு கொண்ட சேவைப் பொருளாதாரந்தான் காந்தியப் பொருளாதாரம் என்று அடித்துக் கூறுகிறார் குமரப்பா.

அமைதிப் பொருளாதாரம்:

 நமது கிராமங்களில் தச்சர், கொல்லர், வாணியர், செம்மான் போன்ற பல தரப்பட்ட தொழிலாளிகள் இருந்தனர். இவர்கள் விவாசாயிகளுக்கு வேண்டிய கருவிகளையும், பொருட்களையும் தக்க சமயத்தில் தயார் செய்து கொடுத்தனர். அறுவடைக் காலத்தில் விவசாயிகள் இவர்கட்கு வேண்டிய தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை ஈடாக கொடுத்து வந்தனர். துட்டுச் செலவில்லாமல் இவ்வாறு ஒதுக்கி பண்டமாற்று அடிப்படையில் அனைவரின் தேவைகளும் நிறைவு பெற்றன. இந் நிலை ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப் படுத்தாத காலத்தில் இருந்த நிலை. ஆனால் இன்றோ அவர்களுடைய பணப் பொருளாதாரம் நம்மையும், உலகையும் ஆட்டுவிக்கிறது. ஏழை, பணக்காரர்களிடையே இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள அளவு ஏற்றத் தாழ்வுகளை ஏற்பட வைத்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அமைதி இல்லை. போட்டி, பொறாமை, சுரண்டல், கொலை, களவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த அவல நிலையை மாற்றி அமைக்கவே பரவல் முறையில் காந்தியடிகள் கதர், கிராமத் தொழில்களை ஆதரித்தார். இவற்றைப் பொது மக்கள், முக்கியமாக கிராமவாசிகள் என்று புரிந்து செயல்படுகின்றார்களோ அன்று தான் அமைதிப் பொருளாதாரம் இந்தியாவை நிர்மாணிக்கும். சிந்தியுங்கள். (நன்றி: திரு. கா. முனியாண்டி எழுதிய காந்தியப் பொருளாதாரச் சிற்பி என்ற நூலின் ஒரு பகுதி)